லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலைக்குப் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் எக்ஸ்பிரஸ்வே என்று பெயர் மாற்றம் பெற உள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் 93 வயதில் ஆகஸ்ட் 16-ம் தேதி இறந்ததினை அடுத்து உத்திர பிரதேச அரசு இந்த முடிவினை வெளியிட்டுள்ளது.
உத்திர பிரதேச அரசு இந்தப் பெயர் மாற்றத்திற்கான திட்டத்தினை விரைவிவ்ல் சமர்ப்பிக்கும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
மூத்த பாஜக தலைஅவர் ஒரு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் ஆக்ராவில் அவரது ஆரம்ப நாட்களைக் கழித்தார் என்றும், லக்னோவின் கர்மபூமி தொகுதியில் தான் லோக்சபா தேர்தலில் மூ5 முறை வென்றார் என்றும் அதற்கான பொருத்தமான அஞ்சலியே இதுவென்றும் தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் இன்னும் பிற சாலைகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு முன்னாள் பிரதமரின் பெயரினை சூட்ட வேண்டும் என்ற திட்டங்களை முதல்வருக்கு அரசு துறைகளைப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா