இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு சக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் அதன் வாகனங்களின் மீதான விலையினை 1 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதனால் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விலை 900 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.
ஏற்கனவே வாகன காப்பீடு மற்றும் உரிமையாளர் - ஓட்டுநர் காப்பீடு மீதான விலை உயர்ந்துள்ள நிலையில் பிற வாகன நிறுவனங்களின் அடுத்தடுத்து விலை உயர்வினை அறிவிக்கும் என்ற தகவல் அதிர்ச்சியை அளித்து வருகிறது.
எப்போது முதல் விலை உயரும்?
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன வாகனங்களின் ஷோரூமிற்கு முந்தைய விலையினை வறுக்கின்ற 2018 அக்டோபர் 3 முதல் உயர்த்த உள்ளதாகவும் ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏன் இந்த விலை ஏற்றம்?
வாகன உற்பத்திக்கு தேவையான மூலதன பொருட்கள், கமாடிட்டி போன்றவை உயர்ந்துள்ளது மற்றும் ரூபாய் மதிப்புச் சரிவு போன்றவையே இந்த விலை உயர்வு முடிவுக்கான காரணம் என்று ஹீரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
காலாண்டு முடிவுகள்
ஹீரோ நிறுவனத்தின் போர்டு இயக்குநர்கள் தலைமையிலான கூட்டம் வருகிறன அக்டோபர் 16-ம் தேதி கூட உள்ளது. அப்போது காலாண்டு மற்றும் அரையாண்டு முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறுகின்றன.
பங்குகள் நிலவரம்
விலை ஏற்றத்தினை அறிவித்ததை அடுத்து ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகள் பிற்பகல் 2:30 மணியளவில் 176 புள்ளிகள் என 5.17 சதவீதம் சரிந்து 2,915.00 ரூபாயாக உள்ளது.