மகாராஷ்டிரா மாநிலத்தின் தொழிலாளர்களின் காப்பீட்டு நிறுவனத்தின் ஈஎஸ்ஐ நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு அனில் அம்பானியின் ரிலிஅயன்ஸ் நிப்பான் லைப் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவத்திற்குக் கிடைத்துள்ளது.
இந்தத் திட்டம் எங்களுக்குக் கிடைத்திருப்பதற்கு நாங்கள் பெருமை அடைவதாகவும், இது எங்கள் வலுவான முதலீட்டுச் செயல்பாடுகள் மற்றும் நிலையான வருவாய் வழங்கும் பதிவிற்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும் ரிலையன்ஸ் நிப்பான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சந்தீப் ஷிக்கா தெரிவித்துள்ளார்.
ஏலம்
ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மகாராஷ்டிரா அரசு விடுத்த ஏலத்தில் பங்கேற்று இந்த 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழியர்கள் காப்பீடு திட்டத்தினைப் பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவின் ஊழியர்கள் காப்பீட்டு நிறுவனம் நிதியில் 2017-ம் ஆண்டு வரை 59,382 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டு நிறுவனம்
ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ரிலையன்ஸ் கேப்பிட்டல் மற்றும் ஜப்பானின் நிப்பான் லைப் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும்.
மொத்த சொத்து மதிப்பு
ஜூலை மாதம் வரையில் ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 4.10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
பிற முக்கியத் திட்டங்கள்
மகாராஷ்டிராவின் ஊழியர்கள் காப்பீடு மட்டும் இல்லாமல் எம்ப்லாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் ஆர்கனைசேசன், கோல் மைன்ஸ் பிராவிடண்ட் ஃபண்ட் ஆர்கனைசேஷன் மற்றும் பென்சன் ஃபண்ட் ரெகுலேட்டரி டெவலப்மெண்ட் அதாரிட்டி ஆகிய நிறுவனங்களின் நிதியையும் ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவனமே நிர்வகித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.