இந்திய டெலிகாம் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜியோ 2021ஆம் ஆண்டுகளுக்குள் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி தொழில்நுட்ப சேவையும், 5ஜி கருவிகளையும் அளிக்கத் திட்டமிட்டு வருவதாக அதிகாரப்பூர்வமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜியோவின் சக போட்டி நிறுவனமாக ஏர்டெல் தற்போது, 2ஜி மற்றும் 3ஜியில் இருக்கும் தனது வாடிக்கையாளர்கள் அனைவரையும் 4ஜி தொழில்நுட்ப சேவைக்கு மாற்றப்போவதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் ஏர்டெல் அடுத்தத் தலைமுறை சேவையான 5ஜி தொழில்நுட்பத்திற்கு எளிதாக மாறிக்கொள்ள முடியும்.
ஜியோ தனது சேவைத் தளத்தை மாற்றும் அதே சமயத்தில் ஏர்டெல்லும் தனது சேவை மேம்படுத்தும் திட்டத்துடனே இந்த முடிவை எடுத்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது மொத்த நெட்வொர்கையும் 4ஜி தொழில்நுட்பத்தில் தான் கட்டமைத்துள்ளது, இதனால் ஜியோ நிறுவனத்தால் 2ஜி மற்றும் 3ஜி வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்க முடியாது.
இதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இனி மேம்பட்ட சேவை அதே கட்டணத்தில் பெற முடியும்.