நவம்பர் மாதம் விழாக்காலம் என்பதால் மக்களுக்கு அதிகளவிலான பணத் தேவை இருக்கும் என்பதை உணர்ந்த ரிசர்வ் வங்கி சுமார் 40,000 கோடி ரூபாயை இந்திய வங்கி அமைப்பிற்குள் உட்செலுத்த முடிவு செய்துள்ளது.
அரசு பத்திரங்கள் வாயிலாக இந்த 40,000 கோடி ரூபாய் முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டுள்ளது ஆர்பிஐ.
அக்டோபர் மாதம் சந்தையின் பல்வேறு வழிகளில் சுமார் 36,000 கோடி ரூபாயை இந்திய வங்கிகளுக்குள் உட்செலுத்திய ரிசர்வ் வங்கி, நவம்பரில் 4000 கூடுதலாக உட்செலுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தக் கூடுதல் தொகையின் மூலம் வங்கிகளின் வர்த்தகம் மேம்படும், இதனால் காலாண்டு மற்றும் வருடாந்திர வருமானம், லாப அளவீடுகளில் உயர்வு காணப்படும். இது பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே வங்கி பங்குகளில் முதலீடு செய்தோருக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.