இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 31 வங்கியான நிதி நிறுவனங்களின் உரிமத்தை வெள்ளிக்கிழமை ரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் திடீர் ரத்து நடவடிக்கைக்கு என்ன காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவிக்காதது கூடுதள் அதிர்ப்தியை ஏற்படுத்துகிறது.
இதில் 17 NBFCகள் உரிமத்தை ரத்து செய்யகோரி வேண்டுகோள் விடுத்த நிலையில் ரிசர்வ வங்கி ரத்து செய்துள்ளது.
தற்போது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள 31 என்பிஎப்சி நிறுவனங்களில் 27 நிறுவனங்கள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் 4 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த 31 நிறுவனங்களில் மிக முக்கியமானவையாகப் பார்க்கப்படுவது ராம்கி பைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ப்ராபிகான் டிரேடிங் & இன்வெட்ஸ்மென்ட் ஆகியவை தான்.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் 1200க்கும் மேற்பட்ட NBFC நிறுவனங்களை ரிசர்வ் வங்கி நேரடி கண்காணிப்பில் வைத்துள்ளது மட்டும் அல்லாமல் கடுமையான விதிமுறைகள் விதித்து வருகிறது.