மும்பை: கார்டு பணபரிவர்த்தனை சேவை நிறுவனமான விசா மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பில்டெஸ்க் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது.
பில்டெஸ்க் நிறுவனம் ஆன்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவில் முதன்மையான நிறுவனமாக உள்ளது.
என்ன மதிப்பு?
பில்டெஸ்க் மற்றும் விசா என இரண்டு நிறுவனங்களும் ஊடகங்களுக்கு எவ்வளவு பங்குகள் பரிவர்த்தனை மாற்றம் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கவில்லை என்றாலும் சில மாதங்களுக்கு முன்பு விசா நிறுவனம் பில்டெஸ்க்கில் 250 மில்லியன் டாலரினை முதலீடு செய்ய இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
அருண் ஜேட்லி
ரூபே மற்றும் பிம் யூபிஐ செயலி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்களின் இந்திய சந்தை சரிந்துள்ள என்று அன்மையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்த நிலையில் இந்த முதலீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பில்டெஸ்க்
மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பில்டெஸ்க் நிறுவனம் ஆண்டுக்கு 60 பில்லியன் டாலர் மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்கிறது. இதில் கிரெடிட், ட்ர்பிட், ஆன்லைன் வாலெட் உள்ளிட்ட அணைத்து பரிவர்த்தனைகளும் அடங்கும்.
வருவாய்
பில்டெஸ்க் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணத்தினை வசூலிப்பதன் மூலம் வருவாயினை ஈட்டுகிறது.
முதலீடு எப்படி?
விசா நிறுவனம் பில்டெஸ்க்கில் நேரடியாக முதலீடு செய்யாது என்றும் தற்போது உள்ள இந்திய வணிகத்திற்கும் இதற்கும் நேரடி தொடர்பு இருக்காது என்றும் தகவல்கள் கூறுகின்றன.