சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமிக்கு இந்தியாவில் மிகப் பெரிய சந்தை உள்ளது. இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் போன் பிராண்டு என்ற பெருமையும் சியோமிக்கு உண்டு.
இப்படிப்பட்ட சியோமி நிறுவனம் ஒரே நாளில் இந்தியாவின் கிராம பகுதிகளில் 500 கடைகளைத் திறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
எப்போது?
சியோமி நிறுவனம் இந்தக் கின்னஸ் சாதனையினை 2018 அக்டோபர் 29ம் தேதி நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்தச் சியோமி ரிடெயில் ஸ்டோர்கள் நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள எம்ஐ ஹோம் ஷோரூம்களுக்கு இணையானது என்றும் கூறுகின்றனர்.
இலக்கு
2019-ம் ஆண்டு இறுதிக்குள் சியோமி நிறுவனம் இந்தியா முழுவதும் 5,000 எம்ஐ ஸ்டோர்களைத் திறந்து 15,000 மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க உள்ளதாகவும் அதன் ஒரு கட்டமாகவே இந்தக் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஆப்லைன் மொபைல் சந்தை
மேலும் 2018-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் ஆப்லைன் மொபைல் சந்தையில் ஆதிகத்தினைச் செலுத்து 100 எம்ஐ ஹோம் ஷோரூம்களைத் திறக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
வெற்றிகரமாக விற்பனை செய்யப்படும் போன்கள்
ரெட்மி 5ஏ மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ இரண்டு போஙளையும் 13,299 ரூபாய் என்றும், ரெட்மி 6, ரெட்மி 6ஏ போன்களை 6,599 ரூபாய் எனவும், ரெட்மி 6ப்ரோ மாடல் போனை 10,999 ரூபாய் என்றும் சியோமி அதிகளவில் தற்போது விற்பனை செய்து வருகிறது.
பிற வணிகங்கள்
சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட தொழில்நுட்ப வணிகங்கள் மட்டும் இல்லாமல் ஷூ, பேக், ஆடை மற்றும் பல விதமான பொருட்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.