வணிகம் மற்றும் வேலை வாய்ப்பு தேடல் சமுக வலைத்தளமான லின்கிடுஇன் 2018-ம் ஆண்டு ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் வழங்கும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன் படி இந்தியாவின் சிலிகான் வேலியான பெங்களூருவில் அதிகச் சம்பளம் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் நிலையில் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களின் நிலை என்ன என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
அதிகம் சம்பளம் அளிக்கும் வேலை
மென்பொருள் வல்லுநர்களை விட ஹார்ட்வேர் ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் வழங்கப்படுவதாக லிங்க்கிடுஇன் தளத்தின் முடிவுகள் கூறுகிறது.
பெங்களூரு மற்றும் மும்பை
பெங்களூருவில் வேலை செய்யும் ஊழியர்களுக்குச் சராசரியாக அதிகபட்சமாக ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. இதுவே இந்தியாவின் நிதி நகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் வேலை செய்பவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது.
டெல்லி மற்றும் ஹைதராபாத்
மூன்றாம் இடத்தில் 8.99 லட்சம் சராசரியுடன் தலை நகர் டெல்லியும், ஹைதராபாத்தில் 8.45 லட்சம் ரூபாயும் சராசரி சம்பளமாக உள்ளது.
சென்னை
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பணிபுரிபவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு 6.3 லட்சம் ரூபாய்ச் சம்பளமாக வழங்கப்படுகிறது.
ஒரு நிறுவனத்தில் அதிகச் சம்பளம் வங்கும் ஊழியர்கள் யார்?
லிங்கிடுஇன் தளம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் அதன் தலைவர், துணைத் தலைவர், இயக்குநர், சிஓஓ மற்றும் நிர்வாக அதிகாரிகள் அதிகச் சம்பளம் பெறுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.