கல்லூரிப் பேராசியர்கள் ஒழுங்காக வராமல் வீட்டிலேயே இருந்து கொண்டு வருகைப் பதிவேட்டில் நண்பர்களை விட்டு கையெழுத்து போடச் சொல்லும் அவலத்தைத் தடுக்க கல்லூரிகளில் பேராசிரியர்களின் வருகைப் பதிவேட்டை Bio Metric ஆக்கியத் கர்நாடக அரசு.
மாணவர்களும்
Bio Metric attendance திட்டம் கர்நாடக அரசு எதிர்பார்த்த அளவுக்கு பலன் கொடுத்திருக்கிறது. தற்போது இந்த முறையை ஏன் மாணவர்களுக்கும் கொண்டு வரக் கூடாது என யோசித்து வந்ததில் அரசு ஓகே சொல்லி இருக்கிறது. தற்போது கல்லூரிகளில் Bio Metric attendance இயந்திரங்களைப் பொருத்தி வருகிறது.
சிரமப்படும் மாணவர்கள்
Bio Metric attendance முறை செயல்பாட்டுக்கு வந்தால் என்ன பிரச்னை வரும் என்று கல்லூரி படித்த அனைவருக்குமே தெரியும் தானே. அதே பஞ்சப் பாட்டை பாடி வருகிறார்கள் கர்நாடக கல்லூரி மாணவர்கள்.
அரசு தரப்பு
கர்நாடக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் ஜி டி தேவகெளடா "கர்நாடகத்தில் இருக்கும் மொத்த கல்லூரிகள் மற்று பல்கலைக்கழகங்களில் Bio Metric attendance-ஐ அமல்படுத்த இருக்கிறோம். இதனால் கல்லூரி மற்றும் பக்கலைக்கழக பேரசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் உள்ளே வரும் போதும், வெளியேறும் போதும் பஞ்ச் செய்து விட்டுத் தான் வர வேண்டும், செல்ல வேண்டும்" என்கிறார்.
ரிசல்ட்ஸ்
இதனால் மாணவர்கள் கல்லூரி நேரத்தில் வெளியே சுற்றுவது குறையும். அதோடு கல்லூரிப் பேராசிரியர்களின் வருகைப் பதிவேடுகளுக்கும் ஒரு க்ரிப் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது கர்நாடக அரசு.
டெண்டர்
தற்போது கர்நாடகத்தில் இருக்கும் மொத்த கல்லூரிகளுக்கும் Bio Metric attendance இயந்திரம் வைக்க தற்போது தான் டெண்டர் விட இருக்கிறார்களாம். இதெல்லாம் நடைமுறைக்கு வந்த பின் வருகைப் பதிவேட்டை சிங்கில் க்ளிக்கில் கணக்கிடலாமாம். எனவே இனி வருகை போதாமல் இருந்தால் நிச்சயம் பரிட்சை எழுத முடியாது எனச் சொல்கிறார்கள்.