ஓய்வு காலத்திற்கு எவ்வளவு வேகமாகத் திட்டமிடுகிறோமோ அவ்வளவு நல்லது. எவ்வளவு முன்கூடியே முதலீட்டைத் தொடங்குகிறோமோ அவ்வளவு அதிகமான பென்ஷன் தொகையினைப் பெற முடியும்.
எனவே உங்கள் குழந்தை வருங்காலத்தினைக் கருத்தில் கொண்டு அவர்கள் பெயரில் தினம் 10 ரூபாய் அல்லது மாதம் 300 ரூபாய் அல்லது ஆண்டுக்கு 3,600 ரூபாயை உங்கள் குழந்தை பிறந்த உடன் முதலீடு செய்யத் தொடங்க முடியுமா?
பொதுவாக நாம் நமது பென்ஷனுக்காகத் திட்டமிடுவது போன்று உங்களை இழந்த பிறகும் உங்கள் பிள்ளைகள் இந்தச் சேமிப்பு மூலம் மாதம் பென்ஷன் பெறுவார்கள்.
தினம் 10 ரூபாய் என மாதம் 300 ரூபாயினைப் பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்து 15 வருடத்திற்குப் பிறகு வரும் முதிர்வு தொகையினை எல்ஐசி வழங்கும் ஜீவன் சாந்தி திட்டத்தில் முதலீடு செய்தால் உங்கள் பிள்ளைகள் 60 வயதாகும் போது மாதம் 30,000 ரூபாய் பென்ஷன் பெறுவார்கள்.
இதுவே பிபிஎப் திட்டத்தில் தொடர்ந்து 25 வருடங்களுக்கு முதலீடு செய்த பிறகு அந்தப் பணத்தினை 8 சதவீத வட்டி விகிதம் லாபம் அளிக்கும் ஒரு முதலீடு திட்டத்தில் முதலீடு செய்தால் உங்கள் பிள்ளைகளுக்கு 60 வயதாகும் போது குறைந்தபட்சம் 54 லட்சம் ரூபாய் கையில் கிடைக்கும்.
இதுவே முதலீடு தொகை அதிகமாக இருந்தால் உங்கள் பிள்ளைகளை நீங்கள் விட்டுப் பிரியும் போது கண்டிப்பாக அவர்கள் கோடீசுவரர்களாகவும் இருப்பார்கள்.
60 வயது என்பது மிக அதிக வயது என்று நாம் நினைக்கலாம், அதே போன்று தினம் 10 ரூபாய் என்பதும் ஒரு குறைந்த முதலீடு தான்.