இது நம் தமிழகத்தில் நடக்க வில்லை, எடப்பாடியாரும், டிடிவியாரும் அடித்துக் கொண்டும் குறை கூறிக் கொண்டும் இருக்கும் போது இது போன்ற நல்ல காரியங்கள் எல்லாம் நடக்காது என்பதை நாமே உணர்ந்திருப்போம். சரி விஷயத்துக்கு வருவோம்.
விடியூ
கர்நாடகாவில் இருக்கும் Visvesvaraya Technological University (VTU) பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் இருக்கும் 16000 புத்தகங்களையும் ஆன்லைனில் கொண்டு வந்திருக்கிறார்கள். பல்கலைகழகத்தில் இருக்கும் அனைத்து மாணவர்களும் தங்கள் கணிணி மூலம் இந்த 16000 புத்தகங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அப்ளிகேஷன்
இன்னும் ஒரு படி மேலே போய், வெறும் கணிணிகளில் பயன்படுத்துவது மட்டும் இல்லாமல் மாணவர்களின் செல் போன்களில் கூட அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை படிக்க ஒரு பிரமாண்ட செயலியையும் தயார் செய்து வருகிறார்களாம்.
சூப்பர்
செயலி முழுமையாக செயல்படத் தொடங்கினால்... இந்தியாவிலேயே முதல் முறையாக 16000 புத்தகங்களை தங்கள் மாணவர்களுக்குக் கொடுத்த முதல் பல்கலைக் கழகம் என்கிற பெருமைய இந்த கர்நாடக பல்கலைக்கழகம் தட்டிச் செல்லும்.
என்ன எல்லாம் இருக்கு
மாணவர்களுக்கு வெறும் பாடம் தொடர்பான புத்தகங்களைத் தாண்டி, வார இதழ்கள், மாத இதழ்கள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் என்று பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை பட்டியலிட்டு வழங்கி இருக்கிறார்களாம்.
தமிழகம் பாடம் கற்குமா...?
அப்படியே ஒரு 350 கிலோமீட்டர் தெற்கு நோக்க் பயணித்து தமிழகம் வந்தால், நம் முதல்வர், மாமனார் வீட்டில் பொரி கடலை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார், விழாவை சிறப்பிக்கிறார், புயலுக்குத் தேவையான நிவாரணப் பணிகளைக் கூட இன்னும் முறையாக செய்யவில்லை. இந்த கொடுமையை எங்கு சென்று முறையிடுவது...?