நுகர்வோர் சாதன தயாரிப்பு நிறுவனங்கள் வர இருக்கும் டிசம்பர் மாதம் முதல் டிவி மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் விலையினை விழா காலச் சலுகைகள் முடிந்ததை அடுத்து உயர்த்த உள்ளன.
விழா காலச் சலுகைகளை வாரி வழங்கிய நுகர்வோர் சாதன உற்பத்தியாளர்கள் தங்களது உள்ளிட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளதா இந்த முடிவை எடுத்துள்ளனர்.
ரூபாய் மதிப்பு
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது மற்றும் சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியது போன்ற காரணங்களினால் தான் உற்பத்தியாளர்களுக்கு உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பானாசோனிக்
பானாசோனிக் இந்தியா நிறுவனம் தங்களது நுகர்வோர் சாதனங்களின் விலையினை 7 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் சில நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது தயாரிப்புகளின் விலையினை உயர்த்தியுள்ளன.
ஹையர்
விழாக்காலங்களில் இந்தியர்கள் அதிகளவில் பொருட்களை வாங்குவார்கள் என்பதற்காக விலை உயர்த்தும் முடிவைத் தள்ளி வைத்து இருந்ததாகவும் தற்போது விலையை உயர்த்தும் நேரம் வந்துவிட்டது என்றும் ஹையர் இந்தியா தெரிவித்துள்ளது.
நுகர்வோர் மின்னணு மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம்
நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தித் துறையானது விழாக் காலங்களுக்கு முன்பு செப்டம்பர் மாதமே தங்களது தயாரிப்புகளின் விலையில் 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தின. ஆனால் அது நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வந்த இழப்பினை பெரிய அளவில் சரிக்கட்டவில்லை என்றும் அதனால் தான் விழாக் காலம் முடிந்த உடன் மீண்டும் விலை ஏற்றம் நடைபெற உள்ளது என்று நுகர்வோர் மின்னணு மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திடம் தெரிவித்துள்ளது.
டிசம்பர்
விழா காலங்களுக்குப் பிறகு டிவி, ஏசி விற்பனை சரிந்துள்ளதாகவும், குளிர்சாதனப் பெட்டி விற்பனை பிளாட்டாக உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனிடையில் புதிய விலை உயர்வு டிசம்பர் முதல் அமலுக்கு வர உள்ளது.