நேருவிற்கு விவசாயத்தை பற்றி ஒரு மண்ணும் தெரியாது- ராஜஸ்தான் பிரச்சாரத்தில் மோடி..!

By Soornamani Ramamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. ஆண்டு முழுவதும் உழைத்து சந்தைக்கு கொண்டு செல்லும் காய்கறிகள், ஒரு ரூபாய்க்கும் குறைவாகவே மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் சில்லறை விற்பனையில் 20 ரூபாய்க்கு வாங்கி சமைத்து, தின்று செரித்துக்கொண்டிருக்கிறோம்.

கத்தரிக்காய் 20 paise :

கத்தரிக்காய் 20 paise :

வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் கத்தரிக்காய் கிலோ ஒன்றுக்கு 20 காசுகளுக்கு குறைவாக கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விரயத்தை ஜீரணிக்க முடியாத மகாராஷ்டிரா விவசாயி, பயிரிடப்பட்டிருந்த கத்தரிக்காயை அழித்து விட்டார்.

வெங்காயம்  கிலோ ரூ.1:

வெங்காயம் கிலோ ரூ.1:

மகாராஷ்ராவைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஒருகிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. 750 கிலோ வெங்காயம் 750 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. பல்வேறு கட்ட பேரங்களுக்குப் பின்னர் 40 காசுகள் கூடுதலாக வழங்கி 1 கிலோ வெங்காயம் 1.40 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் வேதனை அடைந்த அந்த விவசாயி வெங்காய விற்பனையில் கிடைத்த 1064 ரூபாயை பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

கொத்தமல்லி  ரூ.2.5 :

கொத்தமல்லி ரூ.2.5 :

ஹரியானா மாநிலம் கர்னால் மொத்த கொள்முதல் சந்தையில் கொத்தமல்லி விலை 2 ரூபாய் 50 காசுகளுக்குத்தான் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகிறது. இதேபோல் ஸ்பினாச், ரேடிஸ், கொரியாண்டர் விலை 2 ரூபாயிலிருந்து 7 ரூபாய்க்கு விலை போய்கிறது. தக்காளி மற்றும் உருளைக்கிழங்குக்கு எம்.எஸ்.பி ரேட் அடிப்படையில் அம்மாநில அரசு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற காய்கறிகள் குறைவான விலைக்கே கொள் முதல் செய்யப்படுகின்றன.

 தக்காளி  ரூ.3  :

தக்காளி ரூ.3 :

புனே சில்லறை விற்பனை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் சந்தையில் 3 ரூபாயில் இருந்து 6 ரூபாய் வரைதான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பம்பர் கிராப் மற்றும் மிதமிஞ்சிய உற்பத்தி காரணமாக மலிவான விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

தேவைக்கு அதிகமான உற்பத்தி, குளிர் பதனப்படுத்தப்படுத்துவதற்கான வசதி இல்லாமை போன்ற காரணங்களால், விவசாயிகள் அறுவடை செய்த விளை பொருட்களை உடனடியாக விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அல்லது அது வீணாகி விடுகிறது. மேலும் ஆர்டர் செய்தால் வீடுகளுக்கே காய்கறிகளை அனுப்பி வைக்கும் நிறுவனங்களாலும் விவசாயிகளிடம் மலிவான விலையில் காய்கறிகள் பழங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.

தீர்வு என்ன

தீர்வு என்ன

விவசாயிகள் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளை வீணாகாமல் தடுக்க புட் புராஸசிங் சிஸ்டத்தை நோக்கி நகர வேண்டும். இந்தியாவில் 2 சதவீதம் அளவுக்கே புட் புராஸசிங் உள்ளது. அமெரிக்காவில் 60 சதவீதம் புட் புராஸசிங் வசதி செய்யப்பட்டுள்ளது.சிறிய நாடான மொராக்கோவில் 35 விழுக்காடு புட் புராஸசிங் வசதி செய்து கொடுக்கப்பட்டள்ளது.

இழப்பை அதிகம்

இழப்பை அதிகம்

இந்தியாவில் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலங்களைக் கொண்ட விவசாயிகள் மட்டுமே பழம் மற்றும் காய்கறி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இவர்கள் சந்திக்கும் இழப்புகள் மிக அதிகம். இந்தியாவின் விவசாயம் சார்ந்த பகுதிகளில் 10 விழுக்காடுக்கும் குறைவாகவே காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஹார்டிகல்சர் வகை பயிர்கள் 60 விழுக்காடு பயிரிடப்படுகிறது.

 என்ன கொடுமைசார்

என்ன கொடுமைசார்

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி பேசியதாவது,. அவருக்கு (ஜவஹர்லால் நேரு)) தோட்டத்தை தெரியும். ஆகையால் தன் சட்டையில் எப்போதும் ரோஜாவை அணிந்திருந்தார். ஆனால் விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் அவருக்கு தெரியாது என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian farmers crisis under modi's regime

Indian farmers crisis under modi's regime
Story first published: Tuesday, December 4, 2018, 17:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X