வருமான வரிச் செலுத்துவோர் எண்ணிக்கை கடந்த நிதி ஆண்டைக்காட்டிலும் 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சி.டி.பி.டி சேர்மன் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.. இந்த சாதனையை படைப்பதற்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
எண்ணிக்கை உயர்வு
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் வரிச் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க உதவியுள்ளதாக கூறிய அவர், இதுவரை 6.08 பேர் வருமானவரித்துறை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம் ஆகும்.
நம்பிக்கை
இந்திய தொழில் கூட்டமைப்பு(சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய சுஷில் சந்திரா, நடப்பு ஆண்டில் நேரடி வரி வசூல் 11.5 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.. நேரடி வரி வருவாய் பிரிவின் குறிப்பிட்ட இந்த இலக்கை எட்டுவதில் எந்த சிரமமும் இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பணமதிப்பு நீக்கத்தின் பயன்
வெளிநாடுகளில் பணம் பதுக்கல் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள இதுவரை 70 நாடுகள் முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். நேரடி வரி வருவாய் வளர்ச்சி 16.5 சதவீதமாகவும், ஒட்டுமொத்த வளர்ச்சி 14.5 சதவீதமாகவும் இருப்பதாகக் கூறிய சுஷில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வரிச் செலுத்துவோரின் எண்ணிக்கையும், வரி வசூலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
கார்ப்பரேட் வரி உயர்வு
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு கார்ப்பரேட் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக கூறினார். ஏற்கனவே 7 லட்சமாக இருந்த எண்ணிக்கை தற்போது 8 லட்சமாக உயர்ந்துள்ளதாக சுஷில் சந்திரா தெரிவித்தார்.