1945-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த உலக வங்கியில் இந்தியாவும் ஒரு உறுப்பு நாடு தான். சொல்லப் போனால் உலக அளவில் உலக வங்கியிடம் அதிக கடன் வாங்கிய நாடும் இந்தியா தான். இது இரு பெரும் பிரிவுகளாக இருக்கின்றன 1 . International Bank for Reconstruction and Development (IBRD) - சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி. 2. International Development Association (IDA) சர்வதேச வளர்ச்சி சங்கம். இந்த இரண்டு பிரிவுகளிலும் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் உறுப்பினர்களாக சேர்ந்து இருக்கிறார்கள்.
IBRD அமைப்பில் கீழ் சுமார் 189 நாடுகளும், IDA அமைப்பின் கீழ் 173 நாடுகள் இணைந்திஉக்கின்றன.உலக வங்கியின் தலைமை இடம் வாசிங்டன் டிசி. தற்போது இதன் தலைவராக ஜிம் யோங் கிம் இருக்கிறார். உலக நாடுகளுக்கு ஏதாவது கடன் தேவை என்றால் உலக வங்கியிடம் தான் வருவார்கள். அப்படிப்பட்ட உலக வங்கியில் பணி புரியும் அதிகாரி ஒருவரின் வீட்டில் தான் திருட்டு நடந்திருக்கிறது.
இவர் சில நாட்களுக்கு முன் குடும்பத்தோடு ஹைதராபாத்துக்குச் சென்று இருக்கிறார். சுனில் குமார் வீட்டில் அனைவரும் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த கொள்ளையர்கள் சாமர்த்தியமாக வீட்டுக்குள் புகுந்திருக்கிறார்கள்.
ஸ்லைடிங் கதவுகள் இருந்ததால் அதைத்தான் திருடர்கள் பயன்படுத்தி சுனில் குமார் வீட்டில் நுழைந்திருக்கிறார்கள்.
சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 80,000 ரூபாய் ரொக்கப் பணம் என அனைத்தையும் வாரி சுருட்டிக் கொண்டு கிளம்பி இருக்கிறார்கள்.
ஹைதராபாத்தில் இருந்து திரும்பி வந்த சுனில் குமாருக்கு தங்கள் வீடு கொஞ்சம் அலங்கோலமாக இருப்பதைப் பார்த்துவிட்டு பணம் மற்றும் நகை திருடு போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
சென்னை புறநகர் கனத்தூர் காவல் நிலையத்தை இந்த திருட்டுச் சம்பவத்துக்கு புகார் அளித்திருக்கிறார். காவலர்களும் தங்களுக்குத் இருக்கும் சிசிடிவி வீடியோக்கல் மற்றும் தடயங்களை வைத்து விசாரித்து வருகிறார்களாம்.