தலைப்பில் கோவப்படும் புரோக்கர்கள் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்கள் கிடையாது. பங்குச் சந்தை புரோக்கர்கள். ஏன் கோவப்படுகிறார்கள் என ரியல் எஸ்டேட் துறைக்கு சொன்ன பட்ஜெட் அறிவிப்புகளைப் பார்ப்போம். ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு மூன்று முக்கியமான விஷயங்கள் இந்த பட்ஜெட்டினால் சாதகமாக அமைந்திருக்கிறது.
1. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தாங்கள் கட்டி முடித்த வீடுகளை இரண்டு வருடங்கள் வரை கையில் வைத்து விற்கலாம். மூன்றாவது வருடத்தில் இருந்து தான் விற்கப்படாத வீடுகளுக்கும் வரி செலுத்த வேண்டும்.
2. ஒரு நிதி ஆண்டில் 1,80,000 ரூபாய்க்கு மேல் வாடகை வசூலித்தால் டிடிஎஸ் (Tax Deducted At Source - TDS) பிடித்தம் செய்ய வேண்டும் என்று இருந்த விதியை தற்போது 2,40,000 ரூபாய்க்கு அதிகரித்திருக்கிறார்கள்.
அந்த 2 கோடி ரூபாய்
3. ஒருவர் ஒரு வீட்டை விற்று வரும் பணத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். அப்படி அவ வரி செலுத்த விரும்பவில்லை என்றால், அந்த பணத்தில் வேறு ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என தான் இருந்தது. ஆனால் இப்போது வீட்டை விற்று கிடைக்கும் பணத்தில் இரண்டு வீடுகள் வரை வாங்கிக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
சாதகம் 1
மேலே சொன்ன மூன்று விஷயத்தால் எப்போது எல்லாம் லட்சங்களில் கைகளில் பணம் புறள்கிறதோ அப்போது எல்லாம் நேரடியாக ஒரு வீட்டை வாங்கிப் போட்டால் வாடகையாவது கிடைக்குமே எனச் சொல்லி வாங்குவார்கள்.
சாதகம் 2
அவ்வளவு ஏன் ஒரு நகர் புற வீட்டை விற்று வரும் பணத்தை தைரியமாக சொத ஊரில் ஒரு வீட, மீத்ப் பணத்துக்கு கிராமபுறத்தில் நிலம் என வாங்கிப் போட்டால் வருங்காலத்தில் பயன்படுமே எனக் இப்போதே மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
சாதகம் 3
முன்பு பில்டர்கள் ஒரு வருடத்தில் வீடு விற்றாக வேண்டும் என புலம்பிக் கொண்டிருந்தார்கள். இனி இரண்டு வருடங்கள் என்பதால் கையில் இருக்கும் கட்டி முடித்த வீடுகளை எல்லாம் விற்றுக் கொண்டே அடுத்த 5 வருடங்களுக்குள் நிறைய ரியல் எஸ்டேட் திட்டங்களை இப்போதே தீட்டத் தொடங்கிவிட்டார்கள். கையில் இருக்கும் வீடுகளைவ் இற்றுத் தீர்ப்பது நம்பர் 1 வேலை. அது தீர்வதற்குள் எதிர்கால பிராஜெக்டுகளுக்கு அடிக்கல் நாட்டுவது இரண்டாவது வேலை என ஜாலியாக இருக்கிறார்களாம்.