இந்தியா வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கி வங்கிக்குத் திரும்பச் செலுத்தாத விஜய் மல்லையாவை லண்டனுக்குத் தப்பவிட்ட நிலையில் தற்போது 12 கோடி ரூபாய் வருமான வரியும், அபராதமும் செலுத்தாத பெங்களுரூ தொழிலதிபரை மும்பையில் கைது செய்துள்ளது வருமான வரித்துறை.
இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் முறையாகக் கர்நாடக மாநிலத்தின் பெங்களுரூ தொழிலதிபர் 11.94 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தாத காரணத்திற்காகத் திங்கட்கிழமை மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டுக்குச் செல்ல விடாமல் தடுத்ததும் இல்லாமல் வருமான வரித்துறை அவரைக் கைது செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து வரி வசூல் அதிகாரி மோசடியாளரை குறித்த வரியும் அபராத தொகையும் செலுத்த நிலையில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இவர் பெங்களூரில் பல சொத்துக்களை வருமான வரித்துறைக்குத் தெரியாமல் பரிமாற்றம் செய்துள்ளார். இதுவே இவர் மீது வைக்கப்பட்ட மிக முக்கியக் குற்றச்சாட்டாகக் கூறப்படுகிறது. இதே மாதிரி விஜய் மல்லையாவையும் பிடித்திருந்தால் இப்போது அமலாக்க துறை முதல் வருமான வரித்துறை வரையில் லண்டனுக்கு அலைய வேண்டிய அவசியம் இருந்திருக்காது.