பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக மோடி தலைமையிலான மத்திய அரசு சமானியர்களையும், விவசாயிகளைக் கவரும் வகையில் பல திட்டங்களை அறிவித்தது. இதில் முக்கியமான திட்டம் விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் உதவித்தொகை அளிப்பது தான்.
இந்நிலையில் 2019-2020ஆம் நிதியாண்டுக்காகப் பட்ஜெட் அறிக்கையில் பிரதான் மந்திரி கிஸ்ஸான் சம்மான் நிதி யோஜனா திட்டத்திற்குச் சுமார் 75,000 கோடி ரூபாயை பட்ஜெட் அறிக்கையில் ஒதுக்கப்பட்டது. இதைதொடர்ந்து இந்தப் பொதுத் தேர்தலுக்கு முன் அமலாக்கம் செய்து, மக்களிடம் நன்மதிப்பை பெற வேண்டும் என்ற அடிப்படை திட்டத்தில் இத்திட்டத்தைப் பட்ஜெட் அறிவித்து வெறும் 23 நாட்களில் அமலாக்கம் செய்கிறது மத்திய அரசு.
இதன் படி வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர்-இல் இத்திட்டத்தை அமலாக்கம் செய்கிறார் மோடி. இந்த நிகழ்ச்சியில் நாட்டில் 12 கோடி சிறு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட 3 தவணையில் அளிக்கப்பட்டும் 6000 ரூபாய் தொகையில் முதல் தவணையை அளிக்கும் திட்டத்தைப் பிப். 24ஆம் தேதி அறிவிக்க உள்ளார் மோடி. இந்த உதவி தொகை 2 ஹெக்டருக்கும் குறைவான விவசாய நிலம் கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் ஒன்று.