இஸ்லாமியக் கூட்டணியில் இருந்தே பாகிஸ்தானை ஓரங்கட்டிய இந்தியா..? காரணம் பொருளாதாரம்

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புல்வாமா தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்திய பின் நம் இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிக் கொண்டார்.

ஆனால் பாகிஸ்தான் அரசோ நல்லெண்ண அடிப்படையில், அமைதிக்காக அபிநந்தனை இன்று மாலைக்குள் விடுதலை செய்ய இருக்கிறார்கள்.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் கடந்த சில வாரங்களாக கார சாரமாக போய்க் கொண்டிருந்த பிரச்னை இப்போது அபிநந்தன் விடுதலை மூலம் அமைதியடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் பாகிஸ்தான் இந்தியாவை வேறு ஒரு இடத்தில் எதிர்த்திருக்கிறது.

ஐஆர்சிடிசியில் ரயில் டிக்கெட் புக் செய்வது ரொம்ப ஈசி - டிக்கெட் இல்லாவிட்டால் பணம் உடனே கிடைக்கும் ஐஆர்சிடிசியில் ரயில் டிக்கெட் புக் செய்வது ரொம்ப ஈசி - டிக்கெட் இல்லாவிட்டால் பணம் உடனே கிடைக்கும்

ஓ.ஐ.சி

ஓ.ஐ.சி

Organisation of Islamic Cooperation (OIC) என்பதைத் தான் நாம் தமிழில் ஓஐசி எனச் சொல்கிறோம். இந்த அமைப்பில் இஸ்லாமிய நாடுகள் உறுப்பினர்களாகவும், இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் நாடுகள் கவனிக்கும் நாடாகவும் (Observer Country) இருக்கிறார்கள்.

உறுப்பு நாடுகள்

உறுப்பு நாடுகள்

உலக நாடுகளில் 57 நாடுகள் இந்த ஓஐசி அமைப்பில் உறுப்பு நாடுகளாக இருக்கிறார்கள். தங்கள் நாட்டில் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தை பின்பற்றும் இந்த 57 நாடுகளும் தான் முழு முதல் உறுப்பினர்கள். இந்த 57 நாடுகளில் உலக மக்கள் தொகையில் 1.9 பில்லியன் மக்கள் இந்த 57 உறுப்பு நாடுகளில் தான் வாழ்கிறார்கள்.

அமைப்பின் காரணம்..?

அமைப்பின் காரணம்..?

இஸ்லாத்தைப் பின்பற்றும் மக்களின் குரலாக சர்வதேச அளவில் ஒலிக்கவும், இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் கூட்டுறவு மேம்படவும் இந்த அமைப்பை நிறுவினார்கள். சர்வதேச அரசியலில் அமைதி மற்றும் ஒருங்கிணைப்பையும் வலியுறுத்துகிறது இந்த ஓஐசி. ஓஐசியின் அதிகாரபூர்வ மொழிகளாக அரபிக், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகள் இருக்கின்றன.

இந்த ஆண்டு

இந்த ஆண்டு

ஒவ்வொரு வருடமும் இந்த ஓஐசி அமைப்பினர் தங்கள் உறுப்பு நாடுகளோடு பேசி தற்கால அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னைகளை தீர்த்துக் கொள்கிறார்கள். இந்த ஆண்டு கூட்டத்துக்கு இந்தியாவை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருக்கிறார்கள். இந்தியா சார்பாக இந்தியாவின் வெளி உறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்க உள்ளார்.

கடுப்பில் பாகிஸ்தான்

கடுப்பில் பாகிஸ்தான்

இந்த இஸ்லாமிய கூட்டமைப்பில் இந்தியா பங்கேற்பதை எப்போதுமே பாகிஸ்தான் விரும்பியது இல்லை. அனுமதித்ததும் இல்லை. அழைப்பு விடுக்கலாமா என ஒரு வார்த்தைக் கேட்டால் கூட பல முட்டுக் கட்டைகளைப் போட்டு அழைப்பு விடுப்பதையே ரத்து செய்துவிடும் பாகிஸ்தான். காரனம் ஐநா சபைக்கு அடுத்த படியாக நிறைய நாடுகள் ஒரு சர்வதேச அமைப்பில் கீழ் இருக்கிறது என்றால் அது இந்த ஓஐசி தான். ஆக ஒவ்வொரு ஓஐசி கூட்டத்திலும் இந்தியா பாகிஸ்தானுக்கு இழைத்த அநீதிகள், காஷ்மீரில் நடக்கும் பிரச்னைகள் எனப் பேசி கைதட்டல்களை வாங்கும். அதோடு இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானை பாதுகாத்துக் கொள்ள நிதியும் கேட்கும்.

பாக் அமைச்சர் எதிர்ப்பு

பாக் அமைச்சர் எதிர்ப்பு

ஓஐசி 2019-ன் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த உடனேயே "பாகிஸ்தானுக்கு எந்த ஒரு நாட்டோடும் மன வருத்தங்களோ பிரச்னைகளோ இல்லை. ஆனால் இந்தியா சார்பாக யாராவது இந்த ஐஓசி கூட்டத்தில் பங்கேற்றால் பாகிஸ்தான் இந்த இஸ்லாமிய கூட்டமைப்பில் கலந்து கொள்ளாது" எனச் சொல்லி சமரசப் பேச்சுகளில் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் பாகிஸ்தானின் வெளி உறவுத் துறை அமைச்சர் குரேஷி.

தர்மசங்கடத்தில் ஓஐசி

தர்மசங்கடத்தில் ஓஐசி

இந்தியாவை கூப்பிட்டதோடு இப்போது ஓஐசிக்கு இந்தியாவால் சர்வதேச கவனம் வேறு கிடைத்திருக்கிறது. இந்த நேரத்தில் பாகிஸ்தான் சொல்வது போல இந்தியாவை ஒதுக்குவது அத்தனை சரியாக இருக்காது. ஆக இப்போது இந்தியாவை இந்த கூட்டத்தில் பங்கெடுக்க அனுமதிக்கவில்லை என்றால் இந்தியா சொன்னது போல இந்திய இஸ்லாமியர்களை ஒதுக்கியதாக சர்வதேசத்துக்கு தெரிய வரும். ஆக பாகிஸ்தான் ஓஐசி கூட்டத்தில் பங்குபெறவில்லை என்றால் கூட பரவாயில்லை, இந்தியாவை கெளரவமாக அழைத்து வருவது என முடிவானது. இத்தனைக்கு பாகிஸ்தான் எல்லையில் நடத்தப்பட்ட இந்திய விமானப் படைத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கவும் செய்தது ஓஐசி.

நல்ல உறவு

நல்ல உறவு

பாகிஸ்தான் நீங்களாக சவுதி அரேபியா தொடங்கி, ஈரான் வரை பல்வேறு இஸ்லாமிய நாடுகளோடும் எப்போதுமே இந்தியா நல்லுறவையே கொண்டிருக்கிறது. குறிப்பாக பொருளாதார ரீதியில் இந்தியா மற்றும் அரபு நாடுகளுடனான டீல்கள் அதற்கு ஒரு நல்ல சான்று. ஆக இந்தியா இந்த ஓஐசி கூட்டத்தில் பங்கெடுத்தால் இந்தியா மற்றும் அரபு தேசங்களுக்கு மத்தியால உறவு வலுப்படும் எனவும் கணித்திருக்கிறது ஓஐசி அமைப்பு.

இந்தியாவைச் சேருங்கள்

இந்தியாவைச் சேருங்கள்

2002-ம் ஆண்டே இந்தியாவை ஓஐசி அமைப்பில் கவனிக்கும் நாடாக (Observer) கொண்டு வர பரிந்துரைகள் நடந்தது. இந்தியாவுக்கு ஆதரவாக முதலில் பேசத் தொடங்கியது கத்தார். அவர்களைத் தொடர்ந்து துருக்கி, பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் இந்தியாவை ஒரு உறுப்பு நாடாக சேர்க்கவே பரிந்துரைத்தது. காரணம் 18 - 19 கோடி இஸ்லாமியர்கள்.

இந்தியா நட்பு நாடு

இந்தியா நட்பு நாடு

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் அத்தனை போர் மேகங்கள் சூழ்ந்திருக்கின்ற போதும், ஒரு இஸ்லாமிய் கூட்டமைப்பு தன்னுடைய உறுப்பு நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானை விடுத்து இந்தியாவை அழைத்திருக்கிறது. இதை ஒரு ராஜ தந்திர வெற்ரியாகவும், அரபு தேசங்களோடும், இஸ்லாமியர்களோடும் இந்தியா நல்லெண்ணத்திலேயே பழகுவதை பறை சாற்றி இருக்கிறது. எதிர்மறையாக பாகிஸ்தான் இந்தியா என்றாலே எரிந்து விழுகிறது. அதனால் தான் இந்தியா கலந்து கொள்ளும் கூட்டத்தில் பாக் கலந்து கொள்லவில்லை என்கிற பிம்பமும் தோலுரித்துக் காட்டப் பட்டிருக்கிறது.

இதுவே முதல் முறை

இதுவே முதல் முறை

ஓஐசி கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு அழைப்பு வருவது இதுவே முதல் முறை. இந்த ஓஐசி கூட்டமைப்பு 1969-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு உறுப்பினர் அல்லாத நாட்டை அதுவும் ஒரு கவனிக்கும் நாடாக கூட இல்லாத நாட்டை அழைப்பதும் இதுவே முதல் முறையாம்.

சுஷ்மா பேச்சு

சுஷ்மா பேச்சு

இன்று இரவு அபுதாபியில் தொடங்க இருக்கின்ற ஓஐசி கூட்டமைப்பின் கூட்டத்தில் ஒரு கெளரவ விருந்தினராக பேசி கூட்டத்தை தொடங்க இருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ். இது ஓஐசி அமைப்பின் 46-வது உறுப்பு நாடுகள் கூட்டம். இதில் ஏற்கனவே சொன்னது போல பாகிஸ்தான் இதில் பங்கேற்கப் போவதில்லையாம். ஆனால் இந்தியா இந்த சந்தர்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சர்வதேச அளவில் பலமாக ஸ்கோர் செய்திருக்கிறது.

இந்தியாவின் பதில்

இந்தியாவின் பதில்

ஒரு விஷயத்தை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா ஒரு சமத்துவ நாடு. இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும், எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். அப்படி இஸ்லாத்தை பின்பற்ரும் 19 கோடி மக்கள் வாழும் நாடு இந்தியா. உலகிலேயே இந்தோனேஷியா மற்ரும் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் சந்தோஷமாக வாழும் நாடு இந்தியா. ஆக ஓஐசி அமைப்பு அழைப்பு விடுவது இந்திய அரசை அல்ல. அந்த 19 கோடி இந்திய இஸ்லாமியர்களுக்குத் தான் அழைப்பு விடுக்கிறார்கள் எனப் பேசி சர்வதேச அளவில் பாராட்டுக்களை குவித்துக் கொண்டது. அதோடு இந்தியா பாகிஸ்தானை வெறுக்க வில்லை, அரவணைக்கவே செய்கிறது என்றும் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தி இருக்கிறார்கள். இந்த அரவணைப்புக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வேண்டும், தாக்குதல் நடத்த வேண்டும் என்றால் நட்புக் கரம் தான் நீட்டியாக வேண்டும் என இதயத்தில் இருந்து பேசி மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது இந்தியா.

வென்றது ஆனால் தோற்கடிக்கவில்லை

வென்றது ஆனால் தோற்கடிக்கவில்லை

இந்த அன்புத் தாக்குதலுக்குத் தான் பதிலடி கொடுக்கப்படாது எனச் சொல்லி இருக்கிறார்களாம். ஆக மீண்டும் புல்வாமா போல ஒரு சம்பவம் வந்தால் இந்தியா அதே ரீதியில் பதிலடி கொடுக்கும் எனவும் சொல்லி இருக்கிறது வெளியுறவுத் துறை. "ஆக இந்தியா போரில் மட்டும் அல்ல, ராஜ தந்திரத்திலும் பாகிஸ்தானை வென்றிருக்கிறது, ஆனால் தோற்கடிக்கவில்லை" என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் இந்தியாவை வெகுவாக பாராட்டுகிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India is going to participate in orgnaization of islamic cooperation meet in adubhabi pakistan refused to attend

India is going to participate in orgnaisation of islamic cooperation meet in adubhabi pakistan refused to attend
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X