லோக்சபா தேர்தல் வருதுல்ல... இனி பெட்ரோல், டீசல் விலை ஏற வாய்ப்பே இல்லை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தொடர்ச்சியாக ஏறிக்கொண்டே வந்த பெட்ரோல், டீசல் விலை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து இறங்கத் தொடங்கியுள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.20 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.71.20 காசுகளாகவும் உள்ளது. நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இனிமேல் பெட்ரோல், டீசல் விலை நிச்சயமாக ஏறாது என்பதால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கி விட்டனர். கடைசி கட்டத் தேர்தல் நாளான மே மாதம் 19ஆம் தேதி வரையிலும் பெட்ரோல், டீசல் விலையில் அநேகமாக எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு.

தேர்தல் நடக்கும் காலங்களில் பெட்ரோல், டீசல் விலை ஏறாது என்பது சமீப கால உண்மையாகும். பெட்ரோல், டீசல் விலையை ஏற்றினால் அது மத்தியில் ஆளும் பாஜக கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்பதால் பெட்ரோல், டீசல் விலையில் கைவைத்து எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க துணியாது என வாகன ஓட்டிகள் நம்புகின்றனர்.

இந்தியாவில் பறக்கத் தடையா..? Boeing-ஆல் ஸ்பைஸ் ஜெட்டுக்கு வந்த சோதனை..! இந்தியாவில் பறக்கத் தடையா..? Boeing-ஆல் ஸ்பைஸ் ஜெட்டுக்கு வந்த சோதனை..!

எண்ணெய் விலை நிர்ணயம்

எண்ணெய் விலை நிர்ணயம்

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆண்டபோது பெட்ரோல், டீசல் மீதான விலை நிர்ணயம் செய்யும் உரிமையை பொதுத்துறை நிறவனங்களிடம் ஒப்படைத்து விட்டு விலகிக் கொண்டது. பின்னர் மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக ஏட்டிக்கு போட்டியாக, சர்வதேச சந்தையைப் போல தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரை வார்த்தது.

 

 

தினசரி விலை மாற்றம்

தினசரி விலை மாற்றம்

பொதுத்துறை நிறுவனங்கள் வசம் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் உரிமை வந்தவுடன், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முதல் விலை ஏறிக்கொண்டே வருகிறது. ஏதாவது ஒரு மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் சம்பவம் நடந்தால் தேர்தல் நடந்த முடியும் வரையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்காது.

 

 

லோக்சபா தேர்தல்
 

லோக்சபா தேர்தல்

மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன், அதுவரைக்கும் ஏறாமல் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை மளமளவென ஏற ஆரம்பித்துவிடும்.அதுபோலவே கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்காக சுமார் 25 நாட்கள் வரையிலும் பெட்ரோல், டீசல் விலை ஏற மாட்டேன் என்று அடம்பிடித்து நின்றுவிட்டது. தேர்தல் நடந்து முடிந்தவுடன் மீண்டும் பழைய கதையாகிவிட்டது. அதுபோலவே கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற 4 மாநில சட்டசபை தேர்தலுக்காகவும் பெட்ரோல், டீசல் விலை ஏறாமல் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஏறத் தொடங்கியது.

 

 

பெட்ரோல் டீசல் விலை ஏறாது

பெட்ரோல் டீசல் விலை ஏறாது

தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், சமீப நாட்களாக ஏறிக்கொண்டே வந்த பெட்ரோல், டீசல் விலை ஏற வழி இல்லாமல் முட்டுச் சந்தில் நின்றது போல நின்றுவிட்டு மீண்டும் திரும்பி இறங்க யோசித்துக்கொண்டுள்ளது. லோக்சபா தேர்தலின் கடைசி கட்டமாக மே மாதம் 19ஆம் தேதி வரையிலும் பெட்ரோல், டீசல் ஏறாது, இறங்கினாலும் 0.05 பைசா அல்லது 0.10 பைசா என்றுதான் குறையும். அது வரையிலும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சற்று நிம்மதிதான்.

அதிரடி மாற்றம் இல்லை

அதிரடி மாற்றம் இல்லை

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல், டீசல் விலையில் அதிரடியான மாற்றங்கள் எதுவும் இல்லை. சென்னையில், பெட்ரோல் லிட்டர் ரூ. 75. 20 ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ. 71.20 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. காலை 6 மணி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fuel Prices decline due to Election fear

In Chennai the petrol price on today 13.03.19 is Rs.00.00 and diesel price is Rs.0.00. The down trend will be continue till parliamentary election.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X