வாசிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் பல்கலைக்கழகம், தெற்கு கரோலினா பல்கலைகழகம், யேல் பல்கலைக் கழகம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் போன்ற பெயர் பெற்ற பல்கலைக் கழகங்களில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க அமெரிக்க பெருந்தலைகள் மில்லியன் டாலரில் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
லோரி லக்ளின்(Lori Loughlin), மொசிமோ கியானுல்லி (Mossimo Giannulli), ஃபெலிசிட்டி ஹஃப்மேன் (Felicity Huffman) உட்பட 50 பேர் மீது முறையாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்ததி வருகிறார்களாம்.
இப்படி பெயர் பெற்ற பல்கலைக்கழங்களில் தங்களது பிள்ளைகளை சேர்க்க ஹாலிவுட் நடிகைகள் உட்பட பல பிரபலங்கள் மில்லியன் கணக்கில் லஞ்சமாக கொடுத்தோ அல்லது தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தியோ சீட்டு வாங்குவதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிரான்ஸ்பரென்சி இண்டர்நேஷனல் என்கிற அமைப்பு நடத்திய சர்வேயில், 38% உக்ரேனியர்கள், 29% ரஷ்யர்கள் அமெரிக்க கல்விக்கா ஒரு முறையாவது லஞ்சம் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
போலி சான்றிதழ்களைப் பெற, கல்லூரிப் பேராசிரியர்களையே வளைத்துப் பிடித்து பயிற்சி கொடுக்கச் சொல்லி மிரட்டுவது அல்லது லஞ்சம் கொடுப்பது, போலி மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறுவது, மாணவர்களுக்கு பதிலாக வேறு யாரையாவது தேர்வுக்கு அனுப்புவது, அட்மிஷன் அதிகாரிகளிடமே நேரடியாக பேரம் பேசி சீட்டுக்களை வாங்குவது என இத்தனை வழிகளில் லஞ்சம் அமெரிக்க கல்லூரிகளில் ஊடுருவி இருக்கிறதாம்.