டெல்லி: ரியல் எஸ்டேட் பில்டர்கள் ஏற்கனவே தொடங்கிய கட்டுமான திட்டங்களுக்கு புதிய முறைப்படி ஜிஎஸ்டி கணக்கிட்டால் மிக அதிகமாக வரி செலுத்த வேண்டி இருக்கிறது. எனவே ஜிஎஸ்டி வரியைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்கள் ரியல் எஸ்டேட் பில்டர்கள்.
இப்போது அரசு, இரண்டு விதமான ஜிஎஸ்டி வரி முறைகளை கொடுத்திருக்கிறது ஜிஎஸ்டி கவுன்சில். இது இதுவரை கட்டி முடிக்கப்படாத கட்டுமான திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஒன்று நேரடியாக 5 சதவிகிதத்தை ஜிஎஸ்டி வரியாக செலுத்தி விட வேண்டும். இதில் Input tax credit வழங்கப்படாது. இரண்டு 12 சதவிகிதத்தை ஜி.எஸ்.டி வரியாகச் செலுத்த வேண்டும். ஆனால் இந்த 12 சதவிகிதத்துக்கு input tax credit எடுத்துக் கொள்ளலாம்.
ஏதாவது ஒன்று
இந்த இரண்டில் ஏதாவது ஒரு வரி திட்டத்தின் கீழ் ஏப்ரல் 01, 2019 அன்று பாக்கி இருக்கும் கட்டுமான திட்டங்களை கணக்கில் காட்டி, கட்டி முடித்துக் கொள்ள ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி கொடுத்திருக்கிறது.
மலிவு விலை வீடுகள்
இதுவே Affordable housing திட்டங்களாக இருந்தால் நேரடியாக 1 சதவிகித வரியை ஜிஎஸ்டியாக கட்டி விட வேண்டும். இதற்கு Input tax credit கிடையாது. அல்லது 8 சதவிகிதத்தை ஜிஎஸ்டியாக கட்ட வேண்டும் ஆனால் இதற்கு input tax credit எடுத்துக் கொள்ளலாம். இதிலும் ஏதாவது ஒரு வரி முறையை பின்பற்ரி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
இரண்டு வழி
இந்த திட்டம் வரும் ஏப்ரல் 01, 2019-ல் இருந்து அமலக்கு வருகிறது. இதுவரை பாக்கி வைத்திருக்கும் கட்டுமானங்களை எல்லாம் அடுத்த சில மாதங்களில் (எத்தனை மாதங்கள் என அரசு குறிப்பிடவில்லை) கட்டி முடித்து விட வேண்டும் என வருவாய்த் துறைச் செயலர் அஜய் பூஷன் பாண்டே சொல்லி இருக்கிறார்.
முன்பே பேசினார்கள்
வரும் ஏப்ரல் 01, 2019க்குப் பிறகு தொடங்கப்படும் திட்டங்களுக்கு புதிய, குறைந்த ஜிஎஸ்டி வரிகளே விதிக்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறது ஜிஎஸ்டி கவுன்சில். ஏற்கனவே 2019 பிப்ரவரி 24-ல் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஏற்கனவே தொடங்கிய கட்டுமானத் திட்டங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றியும் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பில்டர்கள் கருத்து
அரசின் இந்த முடிவால், வீடுகளின் விலை குறையுமென சில பில்டர்கள் கணக்கு காட்டுகிறார்கள். எது எப்படியோ நல்லது நடந்தால் சரி.