டெல்லி: அரசு தன் கையில் இருக்கும் பங்குகள் மற்றும் மூல தனங்களை விற்று திரட்டும் பணத்தையும் ஒரு வருவாராயகவே கருதும்.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் Department of Investment and Public Asset Management என்கிற துறை தான் இப்படி அரசின் பங்குகள் மற்றும் மூலதனங்களை நல்ல விலைக்கு விற்று இந்திய அரசுக்கான வருவாயைத் திரட்டும்.
இப்படி தன் கையில் இருக்கும் பங்குகள் போன்ற மூலதனங்களை விற்பதற்கு பெயர் தான் Disinvetment. இப்படி இந்த Disinvetment முறையில் 80,000 கோடி ரூபாயை திரட்டி 2018 - 19 நிதி ஆண்டுக்கு இலக்கு நிர்ணயித்திருந்தது மத்திய நிதி அமைச்சகம்.
ஆனால் இந்த 2018 - 19 நிதியாண்டில் 85,000 கோடி ரூபாய் விற்று வருமானத்தை திரட்டி தன் திருத்தப்பட்ட இலக்கை இரண்டாவது ஆண்டாக கடந்திருக்கிறது மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Disinvetment துறை.
கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் திருத்தப்பட்ட இலக்காக 72,500 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு சுமார் 1 லட்சம் கோடி ரூபாயை திரட்டியது Department of Investment and Public Asset Management. இப்போது இந்த 2018 - 19 நிதியாண்டில் திருத்தப்பட்ட இலக்காக 80,000 கோடி ரூபாயை இலக்காக வைத்துக் கொண்டு 85,000 கோடி ரூபாயை ஈட்டி இருக்கிறது.