டெல்லி: ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தற்போது அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். டெல்லியில் நடந்த 'தி தேர்டு பில்லர்' எனும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற போது செய்தியாளர்களிடம் பேசினார்.
நான் செய்து கொண்டிருக்கும் பணியில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் என்னுடைய திறனை பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தால், அதை பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் என ஒரு மாதிரி கமல் போல் பேசியுள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-க்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றால் ரகுராம் ராஜனை நிதியமைச்சராக்கப்படலாம் என பேச்சுக்கள் பலமாக எழுந்துள்ளது.
இதற்கிடையே ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் ஏழை குடும்பத்துக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக ரகுராம் ராஜனிடம் ஆலோசனை கேட்டோம் எனச் சொன்னது இன்னும் சந்தேகத்தை வலுவடையச் செய்திருக்கிறது.
நீங்கள் அடுத்த நிதி அமைச்சர் ஆவீர்களா என ரகுராம் ராஜனிடம் நேரடியாக கேட்டதற்கு "இதுதொடர்பாக எந்த ஒரு கட்சியும் என்னிடம் பேசவில்லை. இது இந்தியாவுக்கே ஒரு முக்கியமான தேர்தல். எனக்கு இந்திய பொருளாதாரத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் எனத் தோன்றுகிறது. யார் என் கருத்தைக் கேட்கத் தாயாரக இருந்தாலும் நான் கொண்டு வர நினைக்கும் மாற்றங்களை விரிவாக கொண்டு வருவேன்" என மீண்டும் மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்றைச் சொல்லி இருக்கிறார்.
ஆனால் இந்த பதிலில் இருந்து இந்தியாவின் நிதி ஆமைச்சராக பணியாற்ற அவருக்கு விருப்பம் இருப்பது கொஞ்சம் புரிய வருகிறது. ரகுராம் ராஜனின் ஆசையை யார் நிறைவேற்றுவார்கள் என காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.