டெல்லி: ரயில் பெட்டி உற்பத்தியில் கடந்த நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி 6037 பெட்டிகளை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது இந்திய ரயில்வே.
இந்தியரயில்வே சென்னையில் ஐ.சி.எப், உத்தரப் பிரேச மாநிலம் ரேபரேலி, எம்.சி.எப், பஞ்சாப் கபுர்தலாவில் ஆர்.சி.எப் என ரயில் பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. 2018 - 2019- ம் நிதியாண்டில் 6000 ரயில்பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால் இந்திய ரயில்வே அதையும் தாண்டி 6037 பெட்டிகளை தயாரித்துள்ளது.
இதுவே முந்தைய ஆண்டு 2017 -2018 ம் நிதியாண்டு 4470 ரயில்பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 35% அதிகமாகும்.
புது புது தொழில் நுட்பம்!
கடந்த நிதியாண்டில் " வந்தே பாரத் விரைவு ரயில் " பல நவீன தொழில்நுட்பங்களில் பல்வேறு ரயில் பெட்டிகள் அறிமுகமாகின. வருடம் முழுவதும் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் அவ்வப்போது புது புது மாற்றங்களைகொண்டு வந்தது, இதுவே சீனா நிறுவனங்கள் வருடத்திற்கு 2600 ரயில் பெட்டிகள் மட்டும் தயாரிக்கப் படுகின்றன.
அதிகளவில் உற்பத்தி!
இதை இந்த ஆண்டு பிப்ரவரியில், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை இந்த உற்பத்தியை முறியடித்தது. இதன் மூலம் உலகிலேயேஅதிக அளவில் ரயில் பெட்டிதயாரிக்கும் தொழிற்சாலையாக உருவெடுத்துள்ளது. நடப்புநிதியாண்டில் ஐ.சி.எப் 2919 ரயில் பெட்டிகளை தயாரித்துள்ளது.
ரேபரேலியில்
ரேபரேலியில்உள்ள எம்.சி.எப்நிறுவனம் 1422 ரயில்பெட்டிகளை தயாரிக்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் 1425 பெட்டிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இத்தொழிற்சாலை 2017 - 2018 - ம் நிதியாண்டில் 711 ரயில் பெட்டிகளை தயாரித்திருந்தது கவனிக்க வேண்டிய விஷயமாகும். ஆய்வுக்காக தனி ஏசி ரயில்பெட்டி உட்பட பல தரப்பட்டரயில் பெட்டிகளை எம்.சி.எப் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேம்படுத்தப்பட்டகட்டமைப்பு வசதிகள்!
பஞ்சாப் மாநிலம் கபுர்தலா நகரில் 1986 -ல் நிறுவப்பட்ட ஆர்.சி.எப் தொழிற்சாலையும், கடந்த நிதியாண்டில் ரயில்பெட்டி தயாரிப்பை அதிகரித்துள்ளது. இது குறித்து மத்தியமின் துறை மஸராக இருந்தபியூஸ் கோயல் 2017 செப்டம்பர் 3 ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றார். அவர் ரயில்வே துறை வளர்சசியினை முடுக்கி விட்டார். பயணிகளை பாதிக்காத பல வகைகளில் ரயில்வே வருவாயை அதிகரிக்க பல்வேறுஅடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்தார்.
இன்ஜின்இல்லாமல் ரயில்!
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ரயில் பெட்டிகளை தயாரிக்கஊக்கமளித்தார். இதனால் ரயில்வே துறைசிறப்பாக வளர்சசி கண்டுவருகிறது. ஐ.சி.எப்2016 - 2017 நிதியாண்டில்இந்த நிறுவனம் 1976 ரயில்பெட்டிகளையும் தயாரித்துள்ளது. இதுவே 2018 - 2019 ம்நிதியாண்டில் முறையே 2085 மற்றும்2919 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த நிறுவனங்கள் வருடத்திற்கு 50 வகையான ரயில் பெட்டிகளை தயாரிக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் முதன்முறையாக இன்ஜின் இல்லாமல் ரயிலை தயாரித்து சாதனைபடைத்துள்ளது.