நியூயார்க்: ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னனி நிறுவனமான அமேசான், அதன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இவர் தனது மனைவி மெக்கின்ஸியை விவகரத்து செய்வதற்காக, சுமார் 35 பில்லியன் கொடுக்க சம்மதித்து உள்ளராம். அதாவது இந்திய ரூபாயில் 2 லட்சத்து 50 கோடியாகும். இதற்கான உடன் பாட்டிலும் கையெழுத்திட்டுள்ளார் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
அமேசான் ஆன்லைன் தொழில் நுட்ப நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாகும். இவர் இந்த அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மெக்கின்ஸியை காதலித்து கடந்த 1993- ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் 1994-வது வருடம் அமேசான் நிறுவனத்தை தொடங்கினார்.
கடந்த சில வருடங்களாகவே இருவரும் பிரிந்து வந்த நிலையில் தற்போது தான் தங்களது விவகாரத்து முடிவை அறிவித்துள்ளனர். அமேசானின் அடுத்தடுத்த வளர்ச்சியில் மெக்கின்ஸிக்கும் பங்கு உண்டு. ஆனால் இதுவரை அமேசான் நிறுவனத்தில் பங்குதாராக இல்லை.
ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் 16 சதவிகித பங்க்குகளை வைத்துள்ளார். அவற்றின் மதிப்பு 136 பில்லியன் டாலராகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 9 லட்சத்து 40 கோடியாகும். ஜெஃப் பெசோஸீம் அவரது மனைவி மெக்கின்ஸியும் தங்களது 25 ஆண்டுகால மணவாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும், மேலும் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்கா சட்டப்படி கணவரின் சொத்தில் பாதியளவு 50% மனைவிக்கு சொந்தம் என்றாலும், அமேசான் நிறுவனத்தில் 16% பங்கு ஜெஃப் பெசோஸிடம் உள்ளது. இதில் பாதி 8% சதவிகிதம் பங்கு தனக்கு வேண்டாம் எனவும் 4% பங்கு போதும் எனவும் மெக்கின்ஸி கூறியுள்ளார். இதன் மூலம் மெக்கின்ஸிக்கு 35 பில்லியன் டாலர் கிடைக்கும் என்றும் செய்திகள் கூறுகின்றன.
மெக்கின்ஸி விவகரத்திற்கு ஒப்புக் கொள்ள கடந்த வியாழக்கிழமையன்று (ஏப்ரல்4, 2019) இருவரும் விவகாரத்து ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டனர். இதன்மூலம் மெக்கின்ஸிக்கு அமேசான் நிறுவனத்தின் 16% பங்கில் 4% பங்கு கிடைக்கும். மீதமுள்ள 75% பங்க்கினை ஜெஃப் பெசோஸிடம் இருக்கும். மெக்கின்ஸிக்கு 25% இருக்கும். இதோடு மட்டும் அல்லாது வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் தனது பங்குகளை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் மெக்கன்ஸிக்கு 2, 50,000 கோடியும், ஜெஃப் பெசோஸிடம் 6 லட்சத்து 80 கோடியாகவும் குறைந்துள்ளதாம்.