விஜயவாடா: சந்திர பாபு நாயுடு தலைமையில் தெலுகு தேசக் கட்சி ஆந்திரத்தை ஆண்டு வருகிறது. 2014-ல் ஆந்திரப் பிரதேசம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போது ஆந்திரத்தில் ஆட்சிக்கு வந்தது தெலுகு தேசம்.
இப்போது ஆந்திரத்தின் இரண்டாவது சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்வோம் என அறிவிக்க வேண்டிய தேர்தல் வாக்குறுதிகளை ஆந்திரத்தின் இரண்டு முக்கிய கட்சிகளான தெலுகு தேசம் மற்றும் வொய் எஸ் ஆர் காங்கிரஸ் இருவருமே கடந்த சனிக்கிழமை (ஏப் 05, 2019) அன்று வெளியிட்டார்கள்.
பொதுவாக இந்த தேர்தல் அறிக்கைகள் உருக்கமாக, உளப் பூர்வமாக இருக்கும். ஆனால் இந்த முறை பாஜக மத்தியில் இருந்து கொண்டு பல்வேறு பண உதவித் திட்டங்களைக் கொண்டு வருவதைப் பார்த்து ஆந்திரமும் அதிரடியாக பல பண உதவித் திட்டங்களில் இறங்கி இருக்கிறது. TDP & YSR என இரண்டு கட்சிகளுமே பாகுபாடு இல்லாமல் பெரிய அளவில் பண உதவித் திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். இதில் தெலுகு தேச கட்சியின் வாக்குறுதிகளை மட்டும் பார்ப்போம்.
உணவும்
ஆந்திர விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் கிடைப்பதோடு, தெலுகு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் Annadata Sukhibhava scheme-ன் கீழ் ஆந்திர அரசும் தன் பங்குக்கு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 15,000 ருபாய் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருபவர்களும் பயன் பெறலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
சுய தொழில்
Ammaki Vandanam எPasupu-Kumkuma என்கிற திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களில் இருக்கும் பெண்களுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் கொடுக்கப் போகிறார்களாம். இந்த ஒரு திட்டத்தினால் மட்டும் சுமார் 1 கோடி ஆந்திரப் பெண்கள் பயனடைவார்களாம். மிக முக்கியமாக இந்த ஒரு கோடி பெண்களுக்கும் இலவச ஸ்மார்ட்போன்களையும் கொடுக்கப் போகிரார்களாம். அதையும் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லி இருக்கிறது தெலுகு தேசம் கட்சி. ன்கிற திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3000 ரூபாய் பென்ஷன் தொகை கொடுக்கப் படும் என்கிறார். இந்த 3000 ரூபாய் ஆண்டுக்கா மாதத்துக்கா என தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதற்கு முன் இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு பண உதவியும் வழங்கப்படவில்லை. தற்போது ஆந்திர மாநிலத்தில் பென்ஷன் தொகை பெற 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால் இந்த முறை தெலுகு தேசம் ஆட்சிக்கு வந்தால் இந்த வயது வரம்பு 60-ஆக குறைக்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
பென்ஷன் திட்டம்
Ammaki Vandanam என்கிற திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3000 ரூபாய் பென்ஷன் தொகை கொடுக்கப் படும் என்கிறார். இந்த 3000 ரூபாய் ஆண்டுக்கா மாதத்துக்கா என தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதற்கு முன் இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு பண உதவியும் வழங்கப்படவில்லை. தற்போது ஆந்திர மாநிலத்தில் பென்ஷன் தொகை பெற 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால் இந்த முறை தெலுகு தேசம் ஆட்சிக்கு வந்தால் இந்த வயது வரம்பு 60-ஆக குறைக்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
18,000 காசு
ஆந்திராவில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இருக்கக் கூடாது என்கிற நோக்கத்தில் ஒரு புதிய ரக திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் தெலுகு தேசம் கட்சிக்காரர்கள். ஒரு தாய் தன் மகனையோ மகளையோ சரியாக பள்ளிக்கு அனுப்பினால் ஆண்டுக்கு 18,000 ரூபாய் பண உதவித் தொகை கொடுக்கப்படுமாம். இதில் எந்த பள்ளிக்கு அனுப்ப வேண்டும்..? தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வரும் பெற்றோர்களுக்கு கூட இந்த திட்டம் பொருந்துமா..? ஆந்திரத்தில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் இந்த சட்டம் பொருந்துமா..? கிராம புற.. நகர் புற.. பிரிவினைகள் உண்டா என எதுவுமே குறிப்பிடவில்லை.
இளைஞர்கள்
தற்போது Yuvanestam திட்டத்தின் கீழ் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 2000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கி வருகிறார்கள். இதை 3,000 ரூபாயாக உயர்த்தப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள் தெலுகு தேசம் கட்சியினர். இப்படி சந்திரபாபு நாயுடு தேர்தலுக்காக பல பணத் திட்டங்களை அரசாங்க திட்டங்களாகவே அறிவித்து வாக்கு கேட்டு வருகிறார்.