என்னது வரி தள்ளுபடியா அதுவும் ரூ.1100 கோடியா..அதுவும் ரிலையன்ஸுக்கா..மோடி சொல்லியிருப்பாரோ

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பிரான்சில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.1,100 கோடி வரி பாக்கியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்து விட்டதாக பிரபல பிரான்ஸ் பத்திரிகை ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் அனைவரின் மந்திலும் எழுந்திருக்கும் ஒரே கேள்வி எதற்கு இந்த தள்ளுபடி என்றே? பிரான்ஸ் நாட்டில் வெளியாகும் லீ மோன்டே செய்திதாளில் வெளியாகியுள்ள செய்தி: ரிலையன்ஸ் அட்லான்டில் பிளாக் பிரான்ஸ் எனும் பெயரில் அனில் அம்பானி பிரான்ஸில் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 2007 முதல் 2012-ம் ஆண்டு வரை செலுத்த வேண்டிய வரி குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் விசாரனை நடத்தியதில் 151 மில்லியன் யூரோ வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பிரான்ஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில், அந்த நிறுவனம், முதல் கட்டமாக 7.3 மில்லியன் யூரோவையும் 2008-2014 காலக் கட்டத்தில் செலுத்த சம்மதித்தது.

என்னது வரி தள்ளுபடியா அதுவும் ரூ.1100 கோடியா..அதுவும் ரிலையன்ஸுக்கா..மோடி சொல்லியிருப்பாரோ

இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் செய்தபோது டசால்ட் நிறுவனத்திடம் இருந்து பறக்கும் நிலையில், 36 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்தார். இது கடந்த 6 மாதங்களுக்குப் முன் நடந்த ஒரு விஷயமாக இருந்தாலும், தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் வரித்தள்ளுபடியை பிரான்ஸ் அரசு வழங்கியுள்ளது.

பிரான்ஸ் தள்ளுபடி செய்தது!
அதாவது, ரிலையன்ஸ் நிறுவனம் 1182 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டிய நிலையில், வெறும் 57 கோடி ரூபாய் மட்டும் செலுத்தக் கூறியுள்ளது. இந்த நிலையில் 1,124 கோடி ரூபாயை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளது என்று அந்த லீ மாண்டே செய்திதாளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெறும் ரூ.56 கோடிதான் கட்டினோம்
இது குறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது, எங்கள் நிறுவனத்துக்கு செயல்பாட்டு ரீதியில் 20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால், பிரான்ஸ் அதிகாரிகள் எங்களிடம் 1100 கோடி ரூபாய் வரி கேட்டனர். பிரான்ஸ் வரி செலுத்தும் சட்டத்தின்படி, நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக நிலை எட்டப்பட்டது. இதன் படி நாங்கள் 56 கோடி ரூபாய் செலுத்தினோம் என்றும் தெரிவித்தார்.

என்னது வரி தள்ளுபடியா அதுவும் ரூ.1100 கோடியா..அதுவும் ரிலையன்ஸுக்கா..மோடி சொல்லியிருப்பாரோ


மோடி தலையீடு இருக்குமோ?
ஏற்கனவே இந்தியாவில் நிலவி வரும் சர்ச்சையில், மோடி கார்பரேட் நிறுவனங்களுக்கு தான் உதவிசெய்வார் என்பதையடுத்து, தற்போது விஷ்வரூபாமாகியுள்ள இந்த செய்தியால் மேலும் பிரச்சனை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. அதிலும் இந்திய பிரதமர் மோடியின் தலையீட்டால் தான் இவ்வளவு பெரிய தொகையை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்ததாகவும், இந்த விவகாரம் இன்றைய அரசியல் சூழலில் இந்தியாவில் பெரும் சர்ச்சைக்கு ஒரு விஷயமாகவும் மாறியுள்ளது. ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களூக்கு உதவி செய்பவர் என்ற நிலையில், தற்போது இந்த செய்தி இது போன்ற தகவல்களை உறுதி செய்வதாகவும் வந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

France gave anil ambani Rs.1100cr tax waiver after rafale deal

Reliance Group chairman Anil Ambani after a newspaper report claimed that the French authorities waived taxes amounting to Rs 1,100 crore for his France-based company within six months after India and France agreed to the Rafale defence deal in 2015.
Story first published: Sunday, April 14, 2019, 8:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X