மும்பை: இன்று காலை மும்பை பங்குச் சந்தை என்றழைக்கப்படும் சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் 38,805 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி ஏற்றம் கண்டு 38,905 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்செக்ஸ் 38,767-க்கு இறக்கத்தில் நிறைவடைந்தது.
இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் சுமார் 40 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமானதும் ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது.
இன்று சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் நின்று விளையாடும் பேட்ஸ்மேன் போல 38 ஆயிரத்து 805 புள்ளிகளில் இருந்து பெரிய இறக்கங்கள் இல்லாமல் நிலையாக ஏற்றத்திலேயே வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. எப்படியோ ஏற்றத்தில் நிறைவடைந்ததே என நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துவிட்டது சென்செக்ஸ்.
செய்திகள்
இன்று சந்தையை நகர்த்த ஒரு பெரிய செய்தி இருந்ததால் தான் இன்று ஏற்றத்திலேயே வர்த்தகமாகி இருக்கிறது. அது தான் மழைப் பொழிவு. மீண்டும் சில வானிலை ஆய்வு மையங்கள், இந்தியாவின் தென்மேற்கு பருவ மழை வழக்கம் போல இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் கொஞ்சம் சந்தையை நகர்த்தின.
பாசிட்டிவ் செய்திகள்
நாளை இந்தியாவின் மிகப் பெரிய டெக்னாலஜி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் காலாண்டு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது. அந்த நிறுவனத்தோடு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தங்களில் வியாபாரம் செய்து வரும் டென் நெட்வொர்க்கின் காலாண்டு முடிவுகளும் வெளி வரப் போகிறதாம். எனவே காலாண்டு முடிவுகள் நாளை ஒரு நல்ல ட்ரிக்கராக இருக்குமா..? பொருத்திருந்து பார்ப்போம்.
எப்போது மாறும் டிரெண்டு
ஏப்ரல் 11, 2019 செய்தியில் சொன்னது போல 38,700 ரெசிஸ்டென்ஸை உடைத்தால் அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக 38,830 இருக்கும் எனச் சொல்லி இருந்தோம். தற்போது சென்செக்ஸ் ஒரு வலுவான சப்போர்ட் (38,585) மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸ் (39,000) புள்ளிகளுக்கு மத்தியில் ஃப்ளாட்டாக கடந்த எட்டு வர்த்தக நாட்கள் வர்த்தகமாகி வந்ததையும் சொல்லி இருந்தோம்.
நிலைக்க வேண்டும்
இப்போது 39,000 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸை உடைத்து 39,005-ல் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இது நிலைக்குமா..? அடுத்த சில நாட்களாவது சென்செக்ஸ் 39.000 புள்ளிகளுக்கு மேலேயே வர்த்தகம் நிறைவடைந்தால் தான் அதை உறுதி செய்ய முடியும். குறிப்பாக தொடர்ந்து 39,000 லெவல்களுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைய வேண்டும்.
மாய எண்
சென்செக்ஸ் வரலாற்றில் 39,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைவது இதுவே இரண்டாவது முறை. எனவே நாளையும் இந்த புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடந்து முதலில் ஏற்றத்துக்கு வலு சேர்க்கட்டும். அதன் பின் வலுவான ஏற்றத்தைப் பற்றி யோசிக்கலாம். ஆக இன்னமும் கூட 39,000 என்பது ஒரு வலுவான ரெசிஸ்டென்ஸ் தான்.
ரெசிஸ்டென்ஸ்
நாளை மீண்டும் இறக்கத்தில் வர்த்தகமானால் முதல் ரெசிஸ்டென்ஸாக 39,000 புள்ளிகளும், இரண்டாம் நிலை ரெசிஸ்டென்ஸாக 39050 புள்ளிகளும் இருக்கும். இவை இரண்டுமே கூட ஓரளவுக்கு வலுவான ட்ரிக்கர்களால் உடைக்கப்படலாம். ஆனால் 39,138 என்கிற புள்ளியைத் தான் அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கிறது. நாளை ஒரு நாளில் இந்த புள்ளியை உடைத்துக் கொண்டு சென்சென்ஸ் உயர்த்தால் தாறு மாறாக உயரும் என எதிர்பார்க்கலாம். வழக்கம் போல அதற்கு வலுவான ட்ரிக்கர்களும் தேவைப்படுகிறது. இப்போதைய சூழலில் 39,050 லெவல்கள் கூட எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது.
அடுத்த சப்போர்ட்
38,900 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும் என கடந்த வெள்ளிக்கிழமையன்றும் சொல்லி இருந்தோம். தற்போது அதை உடைத்திருந்தாலும் நாளை வரை தாங்குமா எனத் தெரியவில்லை. சரி ஒருவேளை இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கினால் 38,830 மற்றும் 38750 என்கிற புள்ளிகள் அடுத்தடுத்த வலுவான சப்போர்ட்டாக இழுத்துப் பிடிக்கும்
நிஃப்டி 50
அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,667 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,704 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,643 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நிஃப்டி இன்றே தன் வலுவான ரெசிஸ்டென்ஸ் 11650-ஐக் கடந்து வர்த்தகமாகி இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
ஏன் ஃப்ளாட்
சென்செக்ஸைப் போலவே நிஃப்டியும் ஒரு வலுவான சப்போர்ட் (11,585) மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸ் (11735)-க்கு உள்ளேயே சின்ன சின்ன ஏற்ற இறக்கத்தோடு வர்த்தகமாகி வந்திருக்கிறது. சென்செக்ஸ் தன் வலுவான ரெசிஸ்டென்ஸான 39,000-த்தை இன்று உடைத்தது போல நிஃப்டி இன்னும் தன் 11735 என்கிற ரெசிஸ்டென்ஸை உடைக்கவில்லை. ஆக முதலில் நிஃப்டி தன் 11,735 புள்ளியை உடைத்துக் கொண்டு மேலே போனால் தான் நிஃப்டி 11760 என்கிற தன் இண்டரா டே ஹை புள்ளியைத் தாண்டி வர்த்தகமாக முடியும். இதைத் கடந்த வெள்ளிக்கிழமையே சொல்லி இருந்தோம்.
ரெசிஸ்டென்ஸ்
நாளை நிஃப்டி மேலே ஏறி அதிகரித்து வர்த்தகமாகத் தொடங்கினால் 11,735 புள்ளிகள் முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும். அதையும் கடந்தால் 11,761 லெவல்கள் கண்ணில் படுகின்றன. நாளை ஒரே நாளில் 11761 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகத் தொடங்கினால் நிஃப்டி சில வரலாறு காணாத புதிய உச்சங்களைத் தொடும் என உறுதியாகச் சொல்லலாம். ஆக 11,735 முதல் நிலை ரெசிஸ்டென்ஸ், 11760 இரண்டாம் நிலை ரெசிஸ்டென்ஸ். அதற்கு மேல் போகாது. அப்படிப் போனால் போனஸ் தான்.
நிஃப்டி சப்போர்ட்
நிஃப்டி இன்று 11,690 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. ஒருவேளை நிஃப்டி கீழே இறங்கி வர்த்தகமாகத் தொடங்கினால் முதல் நிலை சப்போர்ட்டாக 11650 லெவல்கள் இருக்கும். 11,600 மற்றும் 11,585 அடுத்து நல்ல வலுவான சப்போர்ட்டாக இருக்கும். நாளை ஒரே நாளில் நிஃப்டி ஒரு சதவிகித சரியக் காரணங்கள் இல்லாததால் 11,600 வலுவான சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ளலாம்.
மாய எண்
சென்செக்ஸ் எப்படி 39000 புள்ளிகளில் சிக்கிக் கொண்டிருக்கிறதோ அதே போல நிஃப்டி இந்த 11,700-ல் சிக்கித் தவிக்கிறது. இதுவரை நிஃப்டியின் வரலாற்றில் ஒரே ஒரு முறை தான் 11,700 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. நாளையும் இன்று போலவே ஒரு நிலையான ஏற்றம் இருந்தால் கூட இரண்டாவது முறையாக நிஃப்டி 11,700-க்கு மேல் வர்த்தகம் நிறைவடையும் என எதிர்பார்க்கலாம்.
சென்செக்ஸ் & பி.ஸ்.இ
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 11 பங்குகளில் 20 பங்குகள் இறக்கத்திலும், 19 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,800 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,454 பங்குகள் ஏற்றத்திலும், 1,141 பங்குகள் இறக்கத்திலும், 205 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,800 பங்குகளில் 64 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 95 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 20 பங்குகள் இறக்கத்திலும், 30 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.
செக்டோரியல் இண்டெக்ஸ்
எனர்ஜி, மீடியா, பார்மாசியூட்டிக்கள், பொதுத் துறை வங்கிகள் போன்ற துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்து துறை சார்ந்த பங்குகளும் ஏற்றத்தில் தான்வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.
ஏற்றப் பங்குகள்
டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், கோல் இண்டியா, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன் போன்ற பங்குகள் சராசரியாக 2.5 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. டாடா மோட்டார்ஸ் 7.32% ஏற்றத்தில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
இறக்கப் பங்குகள்7
இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், சன் பார்மா, யெஸ் பேங்க், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் ஒரு சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
உலக சந்தைகள்
ஏப்ரல் 12, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை 0.46% அதிகரித்து வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளில் லண்டன் தவிர மற்ற இரண்டும் ஏற்றத்தில் அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. லண்டனின் எஃப்.டி.எஃப்.இ -0.08%, பிரன்சின் சி ஏ சி 0.12% அதிகரித்தும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 0.14% வர்த்தகமாகி வருகின்றன.
ஆசியச் சந்தைகள்
ஆசிய பங்குச் சந்தைகளில் சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ் -0.18%, ஹாங்காங்கின் ஹேங்செங் -0.33%, சீனாவின் ஷாங்காய் காம்போஸைட் -0.34%-ம் குறைந்து வர்த்தகமாயின. மற்ற சந்தைகள் அனைத்து ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக ஜப்பானின் நிக்கி 1.37% ஏற்றத்தில் வர்த்தகமாயின.
டாலர் Vs ரூபாய்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.42 ரூபாய்க்கு வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டு வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலைக்கு 70.92 டாலராக உயர்ந்திருக்கின்றது. ஆனால் நேற்றைய விலையை விட இன்ரு குறைவு தான்.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகளின் மிக அதிகபட்ச விலை சுமார் 585 ரூபாய். ஜனவரி 2015-ம் ஆண்டில் இந்த விலையில் தான் வர்த்தகமானது டாடா மோட்டார்ஸ். ஆனால் அடுத்து அடுத்து டாடா மோட்டார்ஸின் சில பிசினஸ் முடிவுகள், கார்கள் மற்றும் கண ரக வாகனங்களின் விற்பனைச் சரிவு போன்ற காரணங்களால் டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை பிப்ரவரி 2019-ல் 129 ரூபாய் வரை சரிந்து தரை தட்டியது. அப்போது தான் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்டு கார்களுக்கான முதலீடுகள், அதிகரிக்காத வருவாய் மற்றும் லாபம் என எல்லா பிரச்னைகளும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தைச் சூழ்ந்தது. ஆனால் இப்போது கதையே வேறு. இப்போது மீண்டும் டாடா மோட்டார்ஸ் பழைய 582 ரூபாய்க்கு விற்குமா எனத் தெரியாது. ஆனால் குறைந்த பட்சம் ஒரு 30 - 40 சதவிகிதம் வரை பங்கின் விலை அதிகரிக்கும் என பல்வேறு அனலிஸ்டுகள் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
ஆக அடுத்த ஒரு வருடத்துக்குள் ஒரு நல்ல தொகை முதலீடுச் செய்பவர்கள், இந்த பங்கை வாங்குவதைப் பற்றி தெளிவாக விசாரித்து, படித்துத் தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள்.
கடந்த இரண்டு மாதங்களில் 129 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை தற்போது 232 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. சுமார் 100% லாபம். எனவே பார்த்து முதலீடு செய்யுங்கள் அடுத்த மூன்று மாதங்களில் இன்னும் இந்த பங்கு விலை ஏறலாம் என்கிறார்கள் அனலிஸ்டுகள்