டெல்லி: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தற்போது பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் கடந்த மார்ச் 10 முதல் ஏப்ரல் 10 வரை எண்ணெய் விலை (Brent crude) 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த காலத்தில் 71.73 டாலர் வரை பேரலுக்கு அதிகரித்திருந்தது. ஆனால் இதுவே இந்தியாவில் பெட் ரோல் விலை 1% சதவிகிதத்திற்கும் குறைவாகவே அதிகரித்துள்ளது கவனிக்க தக்க விஷயமாகும். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையை வைத்தே, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட் ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கின்றன.
இது எப்போதும் நடக்கும் ஒரு விஷயமாகவே இருந்தாலும், சர்வதேச அளவில் 9 சதவிகிதம் விலை அதிகரித்தும், இந்தியாவில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே விலை அதிகரித்திருப்பது சாதரணமான நிலையே அல்ல என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மேலும் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கும், இந்தியாவில் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என்றாலும், சர்வதேச அளவில் தேர்தல் என்றாலே விலை அதிகரிக்கும் என்ற கணிப்புக்கு மத்தியில், இந்தியாவில் இந்த குறைந்த விலையேற்றம் என்னவென்று சொல்லத் தெரியவில்லை.
4மடங்கு அதிகரித்த பெட் ரோல் டீசல் விலைகள்
கடந்த ஜீன் 2017 முதல் ஏப்ரல் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில், பெட் ரோலின் மாதாந்திர விலை அதிகரிப்பையும், இதுவே இந்த இடைப்பட்ட காலத்தில் கச்சா எண்ணெய் விலையும் ஆராய்ந்ததில், சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையை விட, இந்தியாவில் பெட் ரோல் டீசல் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளன. இதில் மூன்று மடங்கு சட்ட சபை தேர்தலுக்கு முன்பும், மீத ஒரு சதவிகிதம் தேர்தல் அறிவித்த பின்னரேயும் அதிகரித்துள்ளன என்றும் கூறுகின்றனர். ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ம் தேதி வரையே நாங்கள் ஒரு மாதமாக கருதுகிறோம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வழக்கமான தேக்க நிலைதான்
பெட் ரோல் டீசல் விலை இது போன்ற தேக்க நிலை கடந்த 2018-ல் கர்னாடகா மா நிலத்தில் தேற்தலுக்கு முன்பாக ஏப்ரல் முதல் மே மாதம் வரையிலான காலத்தில் இதே போன்று காணப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை சுமார் 11 சதவிகிதம் விலை அதிகரித்திருந்தாலும், உள் நாட்டில் பெட் ரோல் விலை 1 சதவிகிதத்திற்கும் கீழாகவே விலை அதிகரித்திருந்தது.
குஜராத்திலும் அப்படிதான்
அட இங்க் தான் இல்லீங்க கடந்த 2017ல் குஜராத் தேர்தல் நேரத்திலும் இப்படிதான். கடந்த டிசம்பர் 2017ல் குஜராத்தில் நடைபெற்ற தேர்தலின் போது அக்டோபர் - நவம்பர் வரையிலான காலகட்டத்தில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை 10 சதவிகிதம் அதிகரித்தது. ஆனால் நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விலை 2 சதவிகிதம் குறைந்தும், அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 1 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டது.
இந்தியாவிலும் அப்படிதாங்க
கடந்த செப்டம்பர் அக்டோபர் வரையிலான காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 8சதவிகிதம் அதிகரித்திருந்தது. அதேசமயம் உள் நாட்டில் விலை 2 சதவிகிதம் மட்டுமே அதிகரித்திருந்தது. கடந்த அக்டோபர் முதல் வாரத்திலேயே அரசு பெட் ரோல் விலையை கட்டுப்படுத்த ஒரு லிட்டருக்கு 2.50 வரி விலக்கு செய்தது.
இன்னைக்கு விலை இவ்வளவே
எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.75.69 ஆகவும், டீசல விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.70.01 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று (17 ஏப்ரல் 2019) காலை முதல் அமலுக்கு வந்தது. அட என்னங்க அதான் தேர்தல் முடியர வரைக்கும் பெட் ரோல் டீசல் விலை மாறதுன்னு உங்களுக்கு தெரியாதா.