மும்பை : தென் இந்தியாவை சேர்ந்த பிரபல வங்கியான லட்சுமி விலாஸ் வங்கியும், வங்கி அல்லாத நிதி நிறுவனமான இந்தியா புல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணையப் போவதாகவும், இதற்கு இந்த நிறுவனங்களின் தலைமையிலான இயக்குனர் குழுக்கள் மட்டும் ஒப்புதல் அளித்திருந்த நிலையில் பங்கு தாரர்கள் தரப்பில் இன்னும் ஒப்புதல் வாங்க படவில்லை. ஆனால் தற்போது இந்த இணைப்பை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டும் வருகிறது.
அதேசமயம் இந்த வங்கியும் -நிறுவனம் இணைந்த பின், ஆர்.பி.ஐ ஒழுங்குமுறை ஒப்புதலளித்தால், மற்ற பழைய சிறிய தனியார் கடன் வழங்குனர்களின் பங்குகள் மீதும் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. இதில் கரூர் வைஸ்யா வங்கி, கர்நாடகா வங்கி, சவுத் இந்தியன் வங்கி மற்றும் தனுலஷ்மி வங்கி ஆகியவை அடங்கும் என வங்கி வட்டாரங்களில் செய்திகள் தெரிகின்றன என்றாலும், இன்னும் இது குறித்து முறையான அறிவிப்பு ஏதும் அறிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே லட்சுமி விலாஸ் வங்கி நிதி நிலை குறித்த அனைத்து தகவல்களும் ரிசர்வ் வங்கிக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த வங்கியின் மொத்த வாராக்கடன் 3400 கோடி ரூபாய் எனவும், அதோடு கடந்த நிதியாண்டில் மூன்று காலாண்டுகளில் 630 கோடி ரூபாய் நஷ்டத்தையும் எதிர்கொண்டது.
சாமனிய மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்
இந்த நிலையில் லட்சுமி விலாஸ் வங்கியை இந்தியா புல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைக்க போவதாக அந்த வங்கியின் வாரியக் குழு கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாகக் மாதத் தொடக்கத்திலேயே செய்திகள் வெளியான. ஆனால் அதேசமயம் லட்சுமி விலாஸ் வங்கி தனியாருக்கு சொந்த மான வங்கி என்றாலும், இந்த வங்கியில் சுமார் ரூ.30ஆயிரம் கோடி சாமானிய மக்களின் டெபாசிட் தொகை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அந்த வங்கியை பொதுத் துறை வங்கியுடன் இணைக்க முன்வர வேண்டும் என்றும் வங்கி அதிகாரிகள் குழு ரிசர்வ் வங்கியிடம் பரிந்துரைத்தது.
ஒப்புதல் அளிக்குமா
இதையடுத்து ரிசர்வ் வங்கி இந்த வங்கி மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனம் இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்குமா இல்லையா என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் தற்போது வெளியாகி செய்தி வட்டாரத்தில் லக்ஷ்மி விலாஸ் வங்கி (எல்விபி) மற்றும் இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபினான்ஸ் ஆகியவற்றின் இணைப்பிற்கான ரிசர்வ் வங்கி இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவை இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது.
சிறிய தனியார் வங்கிகளின் கடனிலும் கவனம்
ஆனால் இதனால் சிலர் சந்தையிலிருந்து விலகியிருக்கலாம், ஆனால் ரிசர்வ் வங்கி இது குறித்து முறையான அறிவிப்புகளை அறிவித்தால், இந்த வங்கியும்- நிதி நிறுவனமும் இணைந்த பிறகு இரு கடன் வழங்குனர்களால் உள்நாட்டிற்கு ஒப்புதல் அளித்தபின், ஆர்.பி.ஐ ஒழுங்குமுறை ஒப்புதலளித்தால், மற்ற பழைய சிறிய தனியார் கடன் வழங்குனர்களின் பங்குகளில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக கரூர் வைஸ்யா வங்கி, கர்நாடகா வங்கி, சவுத் இந்தியன் வங்கி மற்றும் தனுலஷ்மி வங்கி ஆகியவை அடங்கும்.