என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஒரு புறம் தண்ணீர் பிரச்சனையால் மக்கள் அவதிப்படுவதும் மறுபுறம் நிறுவனங்கள் தண்ணீர் பிரச்சனையால் அவதிப்படுவதும் தொடரும் ஒரு விஷயமாக இருந்தாலும், இது இன்று மட்டுமல்ல. இனி வரப்போகும் அடுத்தடுத்த மாதங்களிலும் இதன் பாதிப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.

 

ஒரு புறம் தண்ணீர் இல்லாததால் காய்ந்து கருவாடாய் போகும் பயிர்கள், மறுபுறம் பயிர் அறுவடை குறையும் என்பதால் உற்பத்தி பாதிப்பு, இந்த நிலைமையில் ஏற்றுமதி மிக பாதிக்கும் என்றும் கருதப்படுகிறது.

உலக அளவில் உணவு பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதி நாடான இந்தியாவில், நிலவி வரும் தண்ணீர் பிரச்சனையால் அதிகளவில் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்றும், இதனால் ஏற்றுமதி மிக பாதிப்படையும் என்றும் இந்திய நீர் வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஏற்றுமதியாளாராக வளர்ந்துள்ளது!

ஏற்றுமதியாளாராக வளர்ந்துள்ளது!

முன்னர் ஒரு புறம் உணவு பற்றாக்குறையால் தவித்த நாடு, இன்று சர்வதேச அளவில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஏற்றுமதியில் வளர்ந்துள்ளது. ஆனால் அதனை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று தான் தெரியவில்லை. ஏனெனில் தண்ணீர் தேவையான இல்லாததால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறையை நீக்க வேண்டும்

தண்ணீர் பற்றாக்குறையை நீக்க வேண்டும்

இருக்கும் இந்த உற்பத்தியை கொண்டு போதுமான அளவு ஏற்றுமதியை செய்ய முடியாது. இதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமேயானால், நீரை தக்கவைத்துக் கொள்ளும் ஏரிகள் குளங்கள் மற்றும் பாரம்பரிய நீர்த்தேக்கங்கள் தண்ணிர் நிலைகளை புதுபிக்க வேண்டும். இதன் மூலமே தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க முடியும் என்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.

இந்தியாவை தண்ணீரை காப்பாற்றும்
 

இந்தியாவை தண்ணீரை காப்பாற்றும்

போதுமான அளவு நீரினாலேயே இந்தியாவை பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியும். இதனால் இந்தியா தண்ணீரை சேகரிக்க போதுமான நடவடிக்களை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதிகளவில் ஏற்றுமதி?

அதிகளவில் ஏற்றுமதி?

இவ்வாறு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் இந்தியா அதிகளவு அரிசி மற்றும் கோதுமை, சர்க்கரை ஆகியவற்றை அதிகளவில் கையில் வைத்திருக்கிறது. இதில் குறிப்பாக அதிகளவு அரிசியையே ஏற்றுமதி செய்து வருகிறது. ஆண்டுக்கு சுமார் 12 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்து சர்வதேச அளவில் சாதனை புரிந்துள்ளது இந்தியா. இதில் 4 மில்லியன் டன் பாசுமதி அரிசியாகும்.

தண்ணீர் வேண்டுமே?

தண்ணீர் வேண்டுமே?

ஒரு புறம் அரிசி உற்பத்திக்கு தண்ணிர் மிக அதிகமாக தேவைப்படும் என்பதேலேயே நடப்பு ஆண்டில் நெல் உற்பத்தி என்பது மிக குறைந்துள்ளது. இதனால் உற்பத்தி குறையலாம் என்றும் ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஒரு கிலோ நெல்லுக்கு 4500 முதல் 5000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மழை குறைவு தான்

மழை குறைவு தான்

பொதுவாகவே கோடைகாலங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும், அதோடு நடப்பு ஆண்டில் மழை பற்றாக்குறையும் உள்ளதால் தண்ணீர் பிரச்சனையே நிலவி வருகிறது. அதிலும் மேற்கு மற்றும் தென் மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை மிக குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Water shortage problem may cut food exports

Water shortage problem may cut food exports
Story first published: Monday, June 24, 2019, 20:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X