பட்ஜெட் 2019: இந்திய பங்குச்சந்தையில் பொதுமக்கள் முதலீடு 35% - நிர்மலா சீதாராமன்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொதுமக்களின் முதலீடு 25 சதவிகிதத்தில் இருந்து 35 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பங்குச் சந்தையின் முதலீட்டு கரத்தை வலுப்படுத்துவதோடு, பொதுமக்களின் பங்களிப்பு அதிக அளவில் இருந்தால் அது இந்திய பங்குச் சந்தைக்கு மேலும் வலுவாக்கும் என்ற காரணத்தினால், பொது மக்களின் முதலீடுகளை 25 சதவிகிதத்தில் இருந்து 35 சதவிகிதமாக உயர்த்தவேண்டும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

பட்ஜெட் 2019: இந்திய பங்குச்சந்தையில் பொதுமக்கள் முதலீடு 35% - நிர்மலா சீதாராமன்

கடந்த 2010ஆம் ஆண்டு வரையிலும் பொதுமக்களின் முதலீடு என்பது சுமார் 15 சதவிகிதமாகவும், பின்னர் 25 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டது. தற்போது சந்தையில் பொதுமக்களின் முதலீட்டை அதிகரிக்கும் வகையில் 25 சதவிகிதத்தில் இருந்து 35 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையானது தற்போது சுமார் 1400 நிறுவனங்களாகும். பொதுவாக இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனங்களில் நிர்வாக இயக்குநர்களின் பங்களிப்பு 51 சதவிகிதம் முதல் 65 சதவிகிதம் வரையிலும், பொதுமக்களின் பங்களிப்பானது 15 சதவிகிதமாகவும் மீதமுள்ளவற்றை இந்திய நிறுவன முதலீட்டாளர்களும் அந்நிய நேரடி முதலீட்டாளர்களும் முதலீடு செய்துவந்தனர்.

இது இந்திய பங்குச் சந்தை தொடங்ப்பட்ட காலத்தில் இருந்துவந்த நடைமுறையாகும். இந்த நடைமுறை கடந்த 2010ஆம் ஆண்டில் சற்று மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி பொதுமக்களின் முதலீடானது 25 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டும் இந்திய ஜனாதிபதியின் பங்களிப்பு 85 சதவிகிதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மீதம் உள்ள 15 சதவிகித பங்குகளை பொதுமக்கள், இந்தியா நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டாளர்களும் பகிர்ந்து கொள்வதுண்டு.

இந்நிலையில் இந்தியப் பங்குச் சந்தையின் முதலீட்டு கரத்தை வலுப்படுத்துவதோடு, பொதுமக்களின் பங்களிப்பு அதிக அளவில் இருந்தால் அது இந்திய பங்குச் சந்தைக்கு மேலும் வலுவாக்கும் என்ற காரணத்தினால், பொது மக்களின் முதலீடுகளை 25 சதவிகிதத்தில் இருந்து 35 சதவிகிதமாக உயர்த்தவேண்டும் என்று நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இந்தியப் பங்குச்சந்தைகளில் பொதுமக்களின் முதலீடுகள் அதிகரிப்பதோடு, சந்தை மூலதனத்தின் மொத்த மதிப்பும் அதிகரிக்கும் என்பது பொருளாதார நிபுணர்களின் கணிப்பாகும். மேலும், பொதுமக்களின் பங்களிப்பு அதிக அளவில் இருப்பதால் சந்தைகளில் பெரிய அளவில் இறக்கம் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019: Public Shares holding must be 35 percent in listed companies

In a budget speech released today, Finance Minister Nirmala Sitharaman said public investment in listed companies would increase from 25% to 35%
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X