டெல்லி : நாட்டில் வேலை அதிகம் உள்ளது, ஆனால் வேலைக்கு தகுதியானவர்கள் தான் பற்றாக்குறையாக உள்ளனர் என்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் சற்று சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய கங்வார், நாட்டில் வேலை வாய்ப்பின்மை பிரச்சினை இல்லை என்றும், மாறாக வேலைக்கு தகுதியானவர்கள் தான் வட இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
வேலை பிரச்சனை தொடர்பாக செய்தித் தாள்களில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன... ஆனால் அது போன்று இங்கு வேலைகளுக்கு பஞ்சமில்லை. அதிலும் நான் வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தை கையாளுகிறேன். தினசரி இது சம்பந்தபட்ட பிரச்சனையை கையாள்கிறேன். தினசரி இப்பிரச்சனையை பற்றி ஆராய்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இங்கு வரும் தேர்வாளர்கள் தரமான திறமையுள்ள நபர்களுக்கு பற்றாக்குறையே நிலவுவதாக கூறுகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா, பாஜக அரசை விமர்சித்ததோடு, உங்கள் அரசாங்கத்திற்கு 5 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது என்றும், ஆனால் வேலை உருவாக்கம் என்பது இல்லை என்றும் கூறியுள்ளார்.
அப்படியே வேலை என்பது ஒன்று இருந்தாலும், பொருளாதார மந்த நிலையால் பறிக்கப்பட்டு விடுகிறது. வட இந்தியர்களை அவமதித்து நீங்கள் தப்பிக்க நினைக்கிறீர்களா என்றும் கூறியுள்ளார்.
மேலும் இது பொருளாதார மந்த நிலை கடுமையான வேலை வளர்ச்சி, ஏற்றுமதியை குறைத்தல் என பல வகைகளிலும் பிரச்சனையை தான் உருவாக்குகிறது என்றும், பொருளாதார வளர்ச்சியை காட்டும் ஜி.டி.பி வளர்ச்சியானது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் தொழிலாளர் அமைச்சரின் கருத்து, அரசியல் மற்றும் கல்வி உலகம் வேலையின்மையை பற்றி பேசிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் வந்துள்ளது என்றும், கடந்த மே 31-ம் தேதி புள்ளி விவர அமைச்சகத்தின் தரவின் படி, கடந்த 2017 - 2018ம் ஆண்டு வேலையின்மை விகிதம் 6.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.