டெல்லி : பொதுவாகவே பொழுதுபோக்கு துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் மக்கள் சினிமா துறைக்கு தற்போது மிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதிலும் பெரு நகரங்களில் வார விடுமுறைய பெரிய மல்டி பிளக்ஸ் தியேட்டர் மால் ஷாப்பிங் என ஆன நிலையில், ஷாப்பிங் மால்களிலேயே தியேட்டர்களும் வரவே மக்களுக்கு மிக ஏதுவான விஷயமாகி விட்டது.
இந்த நிலையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர் வணிகத்தில் ஈடுபட்டு வரும், பிவிஆர் மல்டிபிளக்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், தனது நிகரலாபம் கடந்த ஆண்டை விட 35 சதவிகிதம் அதிகரித்து, அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 46.67 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் இதன் நிகரலாபம் 35.39 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் வேடிக்கை என்னவெனில் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 16.18 கோடி ரூபாயாக மட்டுமே அதன் நிகரலாபம் இருந்தது கவனிக்கதக்கது. இத்துடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் பரவாயில்லை என்றே கூறலாம்.
இதே இந்த நிறுவனம் வட்டி, தேய்மானம் வரி உள்ளிட்டவற்றுக்கு முன்பு இதன் நிகரலாபம் 149 சதவிகிதம் அதிகரித்து, 324.30 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் வெறும் 130.11 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே மொத்த செலவுகள் 37.41 சதவிகிதம் அதிகரித்து 905.75 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது இதற்கு முந்தைய ஆண்டில் 659.14 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே படங்களின் திரைப்படக் கண்காட்சி மற்றும் உணவு பண்டங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், பணியாளர் நலன் செலவுகள் காரணமாகவும், மேலும் தேசிய நிறுவனம் தீர்ப்பாயத்தின் மூலம் பிவிஆர் நிறுவனம் எஸ்.பி.ஐ நிறுவனத்தின் 71.69 சதவிகித பங்குகளை 633 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த நிறுவனத்தின் கடன் 1,282.52 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இதே கடந்த மார்ச் 31வுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 1,247.17 கோடி ரூபாயாக இருந்ததாகவும் இந்த நிறுவனம் பிஎஸ்இக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இதே பிவிஆர் 800 ஸ்க்ரீன்களை இது ஆப்ரேட் செய்து வருகிறது என்றும், இது கடந்த ஆண்டு 711 ஸ்க்ரீன்களை மட்டுமே ஆப்ரேட் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.