இந்தியாவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான UTI பங்குச்சந்தையில் பட்டியலிடச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி இந்நிறுவனத்தின் ஐபிஓ-விற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஐபிஓ திட்டத்தின் மூலம் UTI நிறுவனம் கிட்டதட்ட 3000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க முடிவு செய்துள்ளது.
கொரோனா தாக்கத்தினால் இந்திய வர்த்தகச் சந்தை புதிய முதலீட்டு வாய்ப்பை இழந்து நிற்கும் நிலையில் UTI நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட வருகிறது. இது இக்கொரோனா காலத்தில் முதலீட்டை இழந்த பலருக்கும் முக்கிய முதலீட்டு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
UTI நிறுவனத்தின் தற்போதைய முதலீட்டாளர்கள், இந்நிறுவனத்தின் பங்கு இருப்பைக் குறைக்கும் காரணத்தால் சுமார் 3,89,87,081 பங்குகளைப் பொதுச் சந்தையில் விற்பனை செய்ய உள்ளது.
3000 கோடி ரூபாய்
UTI நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யும் காரணத்தால் இந்நிறுவனத்தின் 3,89,87,081 பங்குகள் விற்பனை செய்து சுமார் 3000 கோடிக்கும் அதிகமான தொகையை ஈட்ட உள்ளது UTI நிறுவனம். இந்தத் தொகையை UTI நிறுவனம் இந்தியச் சந்தையிலேயே மறு முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
முக்கிய முதலீட்டாளர்கள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்ஷ பாங்க் ஆப் பரோடா ஆகிய நிறுவனங்கள் இணைந்து சுமார் 1,04,59,949 பங்குகளையும், பஞ்சாப் நேஷனல் வங்கி, T Rowe Price International ஆகிய இரு அமைப்புகள் இணைந்து 38,03,617 பங்குகள் என மொத்தம் 3,89,87,081 பங்குகளைப் பொதுச் சந்தையில் விற்பனை செய்ய உள்ளது UTI நிர்வாகம்.
பங்கு இருப்பு
UTI நிறுவனத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்ஷ பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியோர் UTI AMC நிறுவனத்தில் தலா 18.24 சதவீதமும், UTI டிரஸ்டி நிறுவனத்தில் தலா 18.50 சதவீத பங்குகளும் வைத்துள்ளது.
இதேபோல் T Rowe Price International நிறுவனம் UTI AMC மற்றும் UTI டிரஸ்டி நிறுவனத்தில் 26 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
பங்கு விற்பனை
தற்போது செய்யப்படும் பங்கு விற்பனையின் மூலம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்ஷ பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்கு இருப்பு 10 சதவீதத்திற்கும் குறைவான அளவை அடையும் எனத் தெரிகிறது.
செபி
கடந்த வருடம் டிசம்பர் மாதம் UTI நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காகச் செபி அமைப்பிடம் இந்நிறுவனம் விண்ணப்பம் கொடுத்த நிலையில் ஜூன் 16ஆம் தேதி இறுதி ஒப்புதல் கொடுக்கப்பட்டு உள்ளது.