உலகில் அனைத்து விஷயங்களிலும் நன்மை, தீமைகள் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் இந்தச் சுமுக வலைத்தளத்தில் எவ்வளவு வாய்ப்புகள், சௌகரியம் இருந்தாலும் ஒரு கட்டத்தில் அது பிரச்சனையாகத் தான் முடிகிறது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் உலகின் முன்னணி சமுகவலைதள நிறுவனமான பேஸ்புக் தனது பிரபலமான இன்ஸ்டாகிராம் செயலியைக் குழந்தைகள் அதாவது 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்காகவே பிரத்தியேகமாகத் தயாரிக்கும் திட்டத்தை மார்ச் மாதத்தில் அறிவித்தது.
இன்ஸ்டாகிராம் செயலி
தற்போது இன்ஸ்டாகிராம் செயலியை 13 வயதுக்கு உட்பட்டவர்கள் பயன்படுத்த முடியாது, இதனால் பல குழந்தைகள் பொய்யான வயதைக் கொடுத்து இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஏற்கனவே அமெரிக்காவில் பல பிரச்சனைகளைக் குழந்தைகள் எதிர்கொண்டு வருகின்றனர்.
குழந்தைகளுக்கான பாதுகாப்பு
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம், யூடியூப் கிட்ஸ் வீடியோ செயலி போலவே குழந்தைகளுக்காகப் பிரத்தியேகமாகவும், அனைத்து விதமான பாதுகாப்புகளும் நிறைந்த ஒரு செயலியாக இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலியை உருவாக்கத் திட்டத்தை மார்ச் மாதத்தில் அறிவித்தது.
4 அட்டர்னி ஜெனரல்
இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிடுமாறு அமெரிக்காவின் 44 அட்டர்னி ஜெனரல் கையெழுத்திட்ட அறிக்கையைப் பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் அனுப்பி வைத்துள்ளனர்.
குழந்தைகளுக்குப் பாதிப்பு
இத்தகைய செயலியால் குழந்தைகளின் உடல்நலம், நல்வாழ்வு பாதிக்கப்படும் எனவும், பேஸ்புக் தளங்கள் ஏற்கனவே குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் இருக்கிறது என்றும் இக்கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.
பேஸ்புக் அடுத்தடுத்த திட்டம்
இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலியைத் தொடர்ந்து மெசஞ்சர் கிட்ஸ் செயலியையும் உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது. 44 அட்டர்னி ஜெனரல் கையெழுத்திட்ட கடிதம் குறித்தும், தனது திட்டத்தைக் கைவிடுவது குறித்தும் இதுவரை பேஸ்புக் எவ்விதமான கருத்தையும் வெளியிடவில்லை.