மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து, மினி சைஸ் மற்றும் நடுத்தர வாகன உற்பத்தியில் முன்னணி விற்பனையாளராகவும் இருந்து வருகின்றது.

 

இந்நிறுவனம் தொடந்து கடந்த சில காலாண்டுகளாக செமிகண்டக்டர் பிரச்சனையால் தத்தளித்து வருகின்றது. மாருதி மட்டும் அல்ல, ஒட்டுமொத்த வாகன உற்பத்தியாளார்களும் சிப் பற்றாக்குறையால் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது சமீபத்திய காலமாகவே வாகன உற்பத்தியாளார்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

சர்வதேச அளவில் நிலவி வரும் பணவீக்கம், சப்ளை சங்கிலி உள்ளிட்ட சில பிரச்சனைகளுக்கு மத்தியில், உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் யூனிகார்ன்.. அதிரடி அறிவிப்பு..! இந்தியாவின் முதல் யூனிகார்ன்.. அதிரடி அறிவிப்பு..!

உற்பத்தி பாதிக்கும்?

உற்பத்தி பாதிக்கும்?

தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும், அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், சப்ளையில் பிரச்சனையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான் மாருதி சுசூகி நிறுவனமும் செமிகண்டக்டர் சப்ளை பிரச்சனையால் உற்பத்தியானது மேற்கொண்டு பாதிக்கப்படலாம் என இந்த நிறுவனத்தின் சிஎஃப்ஓ அஜய் சேத் தெரிவித்துள்ளார்.

மின்சார வாகனங்கள்

மின்சார வாகனங்கள்

உலகம் முழுவதும் பலரும் தங்களது உற்பத்தியினை மின்சார வாகங்களுக்கு மாற்றி வரும் நிலையில், உதிரி பாகங்களும் பெரியளவில் கிடைப்பதில்லை. குறிப்பாக மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்களுக்கு பற்றாக்குறையே இருந்து வருகின்றது. ஆக இது வாகன உற்பத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

கணிக்க முடியாத ஒன்று
 

கணிக்க முடியாத ஒன்று

மேலும் மேற்கொண்டு மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் எப்போது சரியாக கிடைக்கும், என பலவும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஆக சப்ளை எப்போது முதல் சரியாகும் என்பதும் மதிப்பிட முடியவில்லை. சப்ளை செயின், பொறியியல் பொருட்கள் என பலவற்றின் உற்பத்தி குழுவும், விற்பனை குழுவும் மிக துரிதமாக செயல்பட்டு வருகின்றது.

 நிலுவையில் உள்ள ஆர்டர்கள்

நிலுவையில் உள்ள ஆர்டர்கள்

மூன்றாவது காலாண்டில் நிறுவனத்திற்கு வந்த ஆர்டர்களில் 3.63 லட்சம் யூனிட்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இரண்டாவது காலாண்டு உடன் ஒப்பிடும்போது கடந்த காலாண்டில் தான் செமிகண்டக்டர் சப்ளையானது சரியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்துள்ளது. இந்தியாவினை பொறுத்தவரையில் தேவையானது அதிகரித்து வரும் சூழலில், இப்படி பற்றாக்குறை ஏற்படுவது, வாகன உற்பத்தியாளர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.மேலும்

உற்பத்தி பாதிப்பு

உற்பத்தி பாதிப்பு

எப்படி இருந்தாலும் மாருதி சுசூகி நிறுவனமானது செமிகண்டக்டர் பிரச்சைக்கு மத்தியில் சுமார் 46,000 யூனிட்களை உற்பத்தி செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவினை பொறுத்தவரையில் வருடத்திற்கு மாருதி சுசூகி நிறுவனம் 15 லட்சம் யூனிட்களை அதன் மானேசர் மற்றும் குருகிராம் ஆலையில் உற்பத்தி செய்து வருகின்றது. இதே குஜராத் ஆலையில் 7.5 லட்சம் யூனிட்கள் செய்யக்கூடிய அளவுக்கு திறன் உள்ளது.

வாகன துறைக்கு கவலையளிக்கும் விஷயம்

வாகன துறைக்கு கவலையளிக்கும் விஷயம்

மாருதி சுசூகியின் விற்பனை வளர்ச்சி குறித்தான எதிர்பார்ப்பு அதிகரிக்கலாம் என்றாலும், அதிகளவிலான எரிபொருள் விலை மற்றும் என பல காரணிகளுக்கு இது வாகன துறைக்கு கவலையளிக்கும் ஒரு விஷயமாகவும் இருந்து வருகின்றது.

பங்கு விலை நிலவரம்?

பங்கு விலை நிலவரம்?

என்.எஸ்.இ-யில் கடந்த அமர்வில் மாருதி சுசூகி இந்தியா பங்கின் விலையானது சற்று குறைந்து, 8737.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது சற்று குறைந்து, 8,734.85 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் 52 வார உச்ச விலை 9768.55 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 6301.20 ரூபாயாகவும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maruti suzuki's production hit by semiconductor shortage

Maruti suzuki's production hit by semiconductor shortage
Story first published: Sunday, January 29, 2023, 20:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X