போன்பே அதன் வணிகங்கள் மற்றும் துணை நிறுவனங்களை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றுகிறது.
பெங்களூரினை தலைமையிடமாக கொண்ட பேமெண்ட் சர்வீசஸ் நிறுவனமான போன்பே, அதன் பணம் செலுத்துதல், உள்ளிட்ட பல நிதி வணிகங்களையும், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றுவதற்கான அனைத்து செயல்பாடுகளையும் முடித்து விட்டதாக தெரிவித்துள்ளது.
போன்பே பிரைவேட் லிமிடெட்
போன்பே குழுமத்தின் அனைத்து வணிகங்களும், தற்போது இந்தியாவில் போன்பே பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில், இந்தியாவிற்கு முழுமையாக சொந்தமான நிறுவனமாக மாறியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பணம் செலுத்தும் பேமெண்ட் செயலியானது, மூன்று செயல்பாடுகளின் மூலம் தனது செயல்முறையை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
என்னென்ன வணிகம்
போன் பே குழுமம் பண பரிமாற்ற சேவை மட்டும் அல்ல, இன்சூரன்ஸ் வணிகம் மற்றும் வெல்த் புரோக்கிங் சேவையினையும் வழங்கி வருகின்றது.
சமீபத்தில் போன்பே சமீபத்தில் புதிய பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தை (ESOP) உருவாக்கியது. இதன் மூலம் போன்பே குழுவின் 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை இடம்பெயர வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுபிஐ சேவை
போன்பே நிறுவனம் சமீபத்தில் வாங்கிய OSLabs pte ltd உரிமையையும் மாற்றியுள்ளது. இந்த கையகப்படுத்தலை ஜூலை 2022ல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இது தவிர நிறுவனம் 2023ம் ஆண்டிற்குள் பொது பங்கு வெளியீட்டிற்கு செல்லவும் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது யுபிஐ பேமெண்ட் பரிமாற்றத்தில் 46.36% பங்கினை கொண்டுள்ளது.
வளர்ச்சி அடையலாம்
போன்பே-ன் இணை நிறுவனரும், CTO-வுமான ராகுல் சாரி, தொடர்ந்து நிறுவனம் அடுத்தடுத்து வணிகத்தினை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றது. 2026ம் ஆண்டுக்குள் 20%ல் இருந்து 65% ஆக வணிகம் வளர்ச்சி காணலாம் என தெரிவித்துள்ளார்.