வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதங்கள் குறைந்து கொண்டே சென்று செல்கிறது. எனவே அதிக லாபம் தரும் வைப்பு நிதி திட்டங்களை ஆராய்ந்து முதலீடு செய்வது நல்லது. நாம் இங்கு வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அதிக லாபம் பெறகூடிய 6 வழிகளைப் பார்ப்போம்.
வைப்பு நிதி திட்ட கணக்கை இணையம் மூலமாகத் திறத்தல்
வைப்பு நிதி திட்ட கணக்கை இணையம் வாயிலாகத் தொடங்க கூடுதல் வட்டி ஏதும் கிடையாது. நீங்கள் பண்ண வேண்டியது எந்த வங்கி அதிக வட்டி விகிதம் அளிக்கிறது என்று கண்டறிந்து முதலீடு செய்வதுதான்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் ஆர்பிஎல் (RBL) வங்கியில் 24 மாதங்கள் வைக்கும் வைப்புத் தொகைக்கு 8.50 சதவீதம் வட்டி விகித லாபம் பெறலாம். ஆனால் எஸ்பிஐ வங்கியில் 7.5 சதவீதம் மட்டுமே.
நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தல்
ட்ரிபல் ஏ கிரேடு உள்ள நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் போது அதிக வட்டி விகிதங்கள் பெறலாம்.
எஸ்பிஐ வங்கியில் 7.5 சதவீதம் மட்டுமே, ஆனால் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம் வைப்பு நிதி திட்டத்தில் 8.65 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கிறது. டிஎச்எஃப்எல் நிறுவனம் அதிகபட்சமாக 9 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கிறது.
ஃபார்ம் 15ஜி மற்றும் 15எச் மூலம் வரியை குறைத்தல்
உங்களுக்கு வரி செலுத்தம் அளவுக்கு வருமானம் இல்லாதபோது டிடிஎஸ் பிடித்தம் செய்திருந்தால் ஃபார்ம் 15ஜி மற்றும் 15எச் சமர்ப்பிப்பதன் மூலம் வரி பிடித்தலை திவிர்க்கலாம்.
கூட்டு வைப்புத் தொகைக்கு விண்ணப்பிக்கவும்
கூட்டு வைப்புத் தொகைக்கு விண்ணப்பிப்பதன் வாயிலாக நீங்கள் கூட்டு வட்டி பெறலாம். வங்கிகள் ஒவ்வொரு காலாண்டிலும் கூட்டு வட்டியை அளிக்கும் ஆனால் நிதி நிறுவனங்களால் அவ்வாறு தர இயலாது. கூட்டுச் சட்டம் எதிர்காலத்தில் அதிக லாபத்தை உறுதி செய்யும்.
முதிர்ச்சி காலத்திற்கு முன்பே எடுத்தல்
நிரதந்திர வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது முதிர்ச்சி காலத்திற்கு முன்பே திரும்பப் பெறுவது சரி அல்ல. அதனால் உங்களுக்கு அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.பெறும்பாலும் இந்த அபராதம் 1 சதவீதமாக இருக்கும்.
பெற்றோர் பெயரில் முதலீடு செய்தல்
உங்கள் பெற்றோர் மூத்த குடிமக்களாக இருந்தால், அவகளுக்கு வரிக் கட்டும் அளவு வருமானம் இல்லாத போது நீங்கள் உங்கள் பெற்றோரின் பெயர்களில் வைப்பு நிதி திட்ட கணக்கைத் தொடங்கி சேமிக்கலாம்.