நிரந்தர வைப்பு நிதி திட்டங்கள் மூலம் முதலீடு செய்வது குறைந்த லாபமே என்றாலும் மிகவும் பாதுகாப்பான ஒரு முதலீடாக கருதப்படுகிறது.
எனவே நாம் வங்கிகளை விட நிதி நிறுவனங்களில் நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம்.
இங்கு நாம் பார்க்கப் போகும் நிறுவனங்கள் அனைத்தும் அதிக வட்டி அளிக்கக்கூடிய சிறந்த வைப்பு நிதி திட்டங்களை அளிக்கும் நிறுவனாகளாகும். அதுமட்டும் இல்லாமல் எல்லா நிறுவனங்களும் ட்ரிபில் ஏ சான்றிதலுடன் பாதுகாப்பான முதலீடு செய்வதற்கு ஏற்ற நிறுவனங்கள் ஆகும்.
எச்டிஎஃப்சி வைப்பு நிதி
எச்டிஎஃப்சி நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் 22 மாதம் முதலீட்டிற்கு 8.30 சதவீதம் பெறுவர். இது வங்கிகளை விட அதிகமான வட்டியை அளிக்கும்.
பஜாஜ் ஃபினான்ஸ்
பஜாஜ் ஃபினான்ஸ் நிறுவனத்தில் 18 முதல் 60 மாதம் வரை முதலீடு செய்தால் 8.65 சதவீதம் லாபம் பெறலாம். ஆனால் வங்கிகளில் 7.50 சதவீதம் மட்டுமே லாபம் பெற இயலும்.
பிஎன்பி(PNB) ஹவுசிங் ஃபினான்ஸ்
பிஎன்பி(PNB) ஹவுசிங் ஃபினான்ஸ் நிறுவனத்தில் 48 முதல் 84 மாதங்களுக்கு முதலீடு செய்பவர்கள் 8.25 சதவீதம் வட்டி பேர இயலும்.
10 வருடங்களுக்கு மேல் உங்கள் முதலீடு இருக்கும் போது 11.49 சதவீதம் வரை உயர்ந்து கொண்டே செல்லும்.
இது பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் துணை நிறுவனம் என்பதால் மிகவும் பாதுகாப்பான முதலீடாகும்.
குரு ஃபினான்ஸ்
குரு ஃபினான்ஸில் 36 மாதம் வரை முதலீடு செய்தால் 8 சதவீதம் வரை லாபம் பெறலாம். இதில் முதலீடு செய்வது பெரிய லாபம் இல்லை என்றாலும் வங்கிகளை விட அதிக லாபத்தையே அளிக்கிறது.
தேவன் ஹௌசிங்
தேவன் ஹௌசிங் நிதி நிறுவனம் 9 சதவீதம் வரை வட்டி அளிக்கிறது. 40 மாதங்கள் வரை முதலீடு செய்பவர்களுக்கு 8.90 சதவீதம் வரை லாபம் அளிக்கிறது. ரூ.50 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு 9 சதவீதம் வரை லாபம் அளிக்கிறது.
இலவசமாக வருமான வரி தாக்கல் செய்ய ஒன் ஸ்டாப் சொல்யூஷன்
இலவசமாக வருமான வரி தாக்கல்