இன்றைய இண்டர்நெட் உலகில் கிட்டத்தட்ட அனைத்துப் பணிகளையும் நாம் ஆன்லைனிலேயே முடித்துவிடுகிறோம். முன்பெல்லாம் வங்கியில் ஒருவருக்குப் பணம் அனுப்ப வேண்டுமானால் செலானை பூர்த்திச் செய்து மணிக்கணக்கில் வரிசையில் நின்று பணத்தைச் செலுத்த வேண்டும்.
ஆனால் இப்போது வங்கிக்கு அக்கவுண்ட் ஓப்பன் செய்யும்போது மட்டும் போனால் போதும். மற்ற எல்லா வேலைகளையும் ஆன்லைனிலேயே முடித்துக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது தகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைக் கஷ்டமேபடாமல் ஹேக்கர்கள் அள்ளிக் கொண்டு சென்றுவிடுவார்கள்.
எனவே ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது செய்ய வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் குறித்துப் பார்ப்போம்
ஸ்ட்ராங்கான பாஸ்வேர்டு முக்கியம்
ஆன்லைன் பரிவர்த்தனையின் போது நாம் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை ஸ்ட்ராங்கான பாஸ்வேர்டை நாம் செலக்ட் செய்வதுதான். குறிப்பாக நீங்கள் தேர்வு செய்யும் பாஸ்வேர்டு உங்கள் பிறந்த நாள், திருமண நாள், போன்ற தேதிகள் நிச்சயம் இருக்கக்கூடாது. அதே நேரத்தில் பாஸ்வேர்ட் லோயர் மற்றும் அப்பர் எழுத்துகளிலும் எண்கள் மற்றும் ஒருசில சிம்பல்கள் கலந்து இருப்பதும் முக்கியம்.
இதுபோன்ற சிக்கலான பாஸ்வேர்டை ஞாபகம் வைத்துக் கொள்வது கடினம்தான். இதுபோன்ற நேரங்களில் நீங்கள் "Elephant" என்ற பாஸ்வேர்டை செலக்ட் செய்வதற்குப் பதிலாக "Eleph@nt" என்று பயன்படுத்தினால் அது பாதுகாப்பானதாக இருக்கும்.
வாய்மொழி உறுதிப்படுத்துதல் ரொம்ப முக்கியம்
இமெயில் அல்லது வேறு வகையில் பணம் அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வந்தாலோ அல்லது உங்களது அக்கவுண்ட் குறித்த தகவல்களை யாரேனும் ஆன்லைனில் கேட்டாலோ கண்டிப்பாகச் சம்பந்தப்பட்ட வங்கி மேனேஜரிடம் போன் செய்து வார்த்தைகள் மூலம் உறுதி செய்து கொண்டு பின்னர்ச் செயல்படுங்கள். ஏனெனில் உங்கள் இமெயில் மற்றும் வங்கி அக்கவுண்ட்டை ஹேக் செய்து ஒருசிலர் பிராடு செய்வது உண்டு. அவர்களிடம் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம்.
ஆட்டோமெட்டிக் பில் பேமண்ட்-ஐ லிமிட் செய்யுங்கள்
போன் பில் உள்பட ஒருசில பில்களைச் செலுத்த ஆட்டோமெட்டிக் ஆப்சனை நாம் செலக்ட் செய்திருப்போம். போன் பில் செலுத்த வேண்டிய கடைசித் தேதியை நாம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாததால் இந்த வழியை நாம் உபயோகப்படுத்தி இருப்போம்.
ஆனால் அதே நேரம் இந்த ஆட்டோமெட்டிக் பில் பேமண்ட்-க்கு ஒரு லிமிட்டை தேர்வு செய்து வைத்திருப்பது அவசியம். போன் பில், இ.எம்.ஐ ஆகிய பில்கள் சில சமயம் தவறாக வரும்போது இந்த லிமிட் நம்முடைய பணத்தைக் காப்பாற்றும்.
வைஃபையில் கவனம் தேவை.
நீங்கள் ஒரு முக்கியமான பரிவர்த்தனையில் ஈடுபடும்போது பப்ளிக் வைஃபையைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலான ஹேக்கர்கள் பப்ளிக் வைஃபை பயன்படுத்துவோர்களைத் தான் குறி வைப்பார்கள். அதே போல் நீங்கள் சொந்தமாக வைத்திருக்கும் வைஃபையைக் கண்டிப்பாகப் பாஸ்வேர்டு போட்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
இது உங்கள் வைஃபையை வேறொருவர் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மட்டுமின்றி ஹேக்கர்கள் உங்கள் வைஃபையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் இந்தப் பாஸ்வேர்டையும் நாம் முன்பே கூறியது போல் ஸ்ட்ராங்காக வைத்து கொள்து நலம்
ஃபைல்களை அனுப்பும்போது தேவை கவனம்
இதேபோல் முக்கியமான பைல்களை ஆன்லைனில் அல்லது இமெயிலில் அனுப்பும்போது கண்டிப்பாகப் பாஸ்வேர்டு பயன்படுத்திப் பைல்களை அனுப்ப வேண்டும். மேலும் அதற்குரிய பாஸ்வேர்டை அதே மெயிலில் தெரிவிக்காமல் வேறொரு மெயிலில் தனியாக அனுப்ப வேண்டும். அல்லது பாஸ்வேர்டை ஒரு குறிப்பாக மட்டும் கொடுக்க வேண்டும். உதாரணமாகப் பிறந்த நாளை பாஸ்வேர்டாக உபயோகிங்கள் என்று ஹிண்ட் கொடுக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் பாஸ்வேர்டை பகிர வேண்டாம்
சமூக வலைத்தளங்களான கூகுள் ப்ளஸ், பேஸ்புக் ஆகியவற்றில் உங்களுடைய பர்சனல் விஷயங்களைப் பகிரும்போது கவனம் தேவை. அதில் உள்ள தகவல்களைக் கலெக்ட் செய்து உங்களுடைய பாஸ்வேர்டை ஹேக்கர்கள் யூகிக்கும் அபாயம் உள்ளது. இதேபோல் மெசேஜ் அனுப்பும்போது உங்களுடைய பர்சனல் விஷயங்களைப் பகிருவதில் கவனம் தேவை. மேலும் முக்கியப் பரிவர்த்தனைக்கு என்றே தனியாக ஒரு இமெயில் வைத்துக் கொள்வது நன்று
ஒன் டைம் பாஸ்வேர்டு ரொம்ப முக்கியம்
தற்போது அனைத்து வங்கிகளும் கிட்டத்தட்ட ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் ஒன் டைம் பாஸ்வேர்டு முறையைக் கொண்டு வந்துவிட்டது. உங்கள் மொபைலுக்கு வரும் ஒன் டைம் பாஸ்வேர்டை நீங்கள் பதிவு செய்தால் தான் அடுத்த ஸ்டெப் போக முடியும். இந்த வசதி உங்கள் பணத்தைப் பாதுகாக்கும் இன்னொரு அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்வேர்டு போட்டுப் பணத்தைப் பரிவர்த்தனை செய்வதை விட இந்த முறை மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
மேலும் வங்கி பாஸ்வேர்டுகளையோ, ஒன் டைம் பாஸ்வேர்டுகளையோ உபயோகிக்க நீங்கள் வங்கிகள் அளிக்கும் வெர்ட்சுவல் கீ போர்டை உபயோகிப்பது ரொம்ப அவசியம். இந்த வெர்ட்சுவல் கீ போர்டின் மூலம் பாஸ்வேர்டை பதிவு செய்தால் ஹேக்கர்கள் கண்டுபிடிக்கவே முடியாது. ஒருவேளை உங்கள் வங்கி வெர்ட்சுவல் கீ போர்டை தரவில்லை என்றால் நீங்கள் ஆன்லைன் மூலம் அதை டவுன்லோடு செய்து கொள்ளவும்.
உங்கள் போனை சுத்தம் செய்ய வேண்டும். எப்போது தெரியுமா?
உங்கள் மொபைல் போன் விற்கும் நிலை ஏற்பட்டால் உடனே அதில் உள்ள அனைத்து பர்சனல் விஷயங்களையும் கண்டிப்பாக டெலிட் செய்ய வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் பாஸ்வேர்ட் அல்லது பேட்டர்ன் பாதுகாப்பு மட்டும் உங்கள் பர்சனல் டேட்டாக்களைப் பாதுகாக்காது. முடிந்தால் போனை ரீசெட் செய்துவிடுங்கள். மேலும் உங்கள் செல்போன்தொலைந்து விட்டால் உடனே ஆட்டோமெட்டிக் சிஸ்டம் மூலம் அதில் உள்ள டேட்டாக்களை அழித்து விடுங்கள்
மேலும் தற்போதைய லேட்டஸ்ட் மாடல்களில் விரல் ரேகை பதிவு செய்யும் சிஸ்டம் வந்துள்ளதால் உங்கள் போனின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. இவ்வகையான போன்கள் மூலம் வங்கி பரிவர்த்தனை செய்வது உங்கள் பணத்தைப் பாதுகாக்கும் வழிகளில் ஒன்று என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
ஆபரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்வது முக்கியம்
ஒவ்வொரு ஆபரேட்டிங் சிஸ்டமும் அவ்வப்போது அப்டேட் செய்வது மிக முக்கியம். லேட்டஸ்ட் வெர்ஷனில் புதிய செக்யூரிட்டி அம்சங்கள், அப்டேட்டுக்கள், டிரைவர்கள் ஆகியவை உங்களுக்கு மேலும் பாதுகாப்பை அதிகரிக்கக்கூடும்
அப்டேட்
அதே போல் உங்கள் கம்யூட்டரையும், ஆண்ட்டி வைரஸையும், மற்ற ரெகுலர் செக்யூரிட்டி அம்சங்களையும் அவ்வப்போது அப்டேட் செய்வது மிகவும் முக்கியம். மேலும் பிரெளசர் செட்டிங்கில் குக்கீஸ்களைப் பிளாக் செய்யும் செட்டிங்கும் முக்கியம்