மும்பை பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாகவே மோசமான வர்த்தகத்தைச் சந்தித்து வருகிறது. இதனால் பன்னாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீட்டை திருப்பப்பெற்று வருவதால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் பங்குச்சந்தைக்கு நிகரான அல்லது தற்போது மோசமான நிலையில் தப்பிக்கச் சரியான முதலீட்டுத் திட்டத்தில் முதலீட்டுச் செய்ய 9 திட்டங்கள் உள்ளது.
டெபிட் கார்ப்பரேட் பத்திரங்கள்
வரிச் சலுகைகள் இல்லாத இந்தப் பத்திரத்திகளைப் பல நிறுவனங்கள் வெளியிட்டு வருகிறது. இப்பத்திரத்தின் மீதான முதலீட்டில் அதிகளவிலான போட்டி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கார்பரேட் பத்திரங்கள்
கட்டுமான துறையில் பொதுத்துறை நிறுவனங்களின் இந்தப் பத்திரங்களை அதிகளவில் வெளியிடுகிறது. இந்தப் பத்திரத்தின் மீதான முதலீட்டுக்கு வரி கிடையாது.
அரசு பத்திரங்கள்
பொது அரசு பத்திரங்களில் பல முதிர்வு காலங்கள் உண்டு. சாதாரணப் பத்திரங்களில் முதலீடு செய்வதுடன் முதலீட்டாளர்கள் இந்த அரசு பத்திரகங்களிலும முதலீடு செய்யலாம்.
தற்போதைய நிலவரத்தில் அரசு பத்திரங்கள் 6.54 சதவீதம் முதல் 7.06 சதவீதம் வரையிலான வட்டியை அளிக்கிறது.
அரசு பத்திரங்கள் இணைக்கப்பட்ட ஈடிஎப்கள்
இப்பிரிவில் இரண்டு பத்திரங்கள் உண்டு. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு
1. எல்ஐசி மியூச்சவல் பண்ட் அரசு பத்திர ஈடிஎப்கள்
2. எஸ்பிஐ மியூச்சவல் பண்ட் 10 வருட கில்ட் ஈடிஎப்
3. ரிலையன்ஸ் கில்ட் ஈடிஎப்
குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு
1. ரிலையன்ஸ் ஈடிஎப் லிக்விட் BeES
கோல்டு ஈடிஎப்
பங்குச்சந்சையில் முதலீடு செய்ய விருப்பம் இல்லாதவர்களுக்கும், தங்கம் மீது தீரா காதல் கொண்ட ஆண் மற்றும் பெண் முதலீட்டாளர்கள் கோல்டு ஈடிஎப்-இல் முதலீடு செய்யலாம்.
சவரன் தங்க பத்திரம்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சவரன் தங்க பத்திரம் சந்தையில் பெரிய அளவிலான வெற்றி பெறவில்லை என்றாலும், தங்கத்தை அதிகளவில் கையில் வைத்துள்ளவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நாணய முதலீடு
டாலர், யூரோ, பவுண்ட்,யென் நாணயங்களில் வெளியீடு பியூச்சர்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். பங்குச்சந்தை முதலீட்டுக்கு இது சிறந்த மாற்றமாக இருக்கும்.
சர்வதேச பங்கு சந்தை
தற்போதைய நிலையில் இரண்டு சர்வதேச பங்குச் சந்தை ஈடிஎப்கள் மட்டுமே உள்ளது. அவரை மோதிலால் ஆஸ்வால் MF NASDAQ 100 ETF மற்றொன்று ரிலையன்ஸ் ETF Hang Seng BeES.
பியூச்சர் சந்தையில் டாவ் ஜோன்ஸ், எஸ் அண்ட் பி 500, எப்டிஎஸ்ஈ 100 குறியிட்டுகள் உள்ளது. இதிலும் நீங்கள் முதலீடு செய்யலாம்.
இன்பராஸ்டக்சர் முதலீடு டிரஸ்ட்
நாட்டில் இன்பராஸ்டக்சர் துறையில் இருக்கும் பல நிறுவனங்கள் சந்தையில் முதலீடு செய்ய வாய்ப்புகளை வழங்குகிறது. இதுமட்டும் அல்லாலமல் இத்தகைய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடும் போதும் 10 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.