வரியை குறைக்க உதவும் 5 சிறந்த வரி சேமிப்பு பத்திரங்கள்.. ஆபத்தில்லா முதலீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய பொருளாதார சூழலில் பணத்தை சம்பாதிப்பதை விட அதைச் சேமிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஒரு தேர்ந்த பொருளாதார வல்லுநர் பணத்தை சம்பாதிக்கும் வழியை விட, அதைச் சேமிக்கும் வழியை மட்டுமே போதிப்பார். நாம் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் நாம் சம்பாதிக்கும் இரண்டு ரூபாய்க்கு சமமாக கருதப்படுகின்றது. நாம் பல்வேறு வகைகளில் பணத்தை சேமிக்கலாம். எனினும் வருமான வரியில் சேமிப்பதே மிகக் சிறந்த சேமிப்பாக கருதப்படுகின்றது.

வரி சேமிப்பு பத்திரங்கள் என்பது அதனுடைய பெயர் குறிப்பிடுவது போல், வருமான வரிச் சட்டத்தின் 80CCF பிரிவின் படி வரிகளைச் சேமிக்க முதலீட்டாளருக்கு உதவுகிறது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மொத்த வரி அளவு குறைகிறது. இத்தகைய முதலீடுகளைக் குறைந்தது 5 வருட காலத்திற்கு திரும்ப எடுக்க இயலாது. எனவே நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் உகந்தது. இந்த வரி சேமிப்பு பத்திரங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கின்றன. மேலும் இதில் ஆபத்துக்களும் அதிகம் இல்லை.

 வருமான வரிச் சட்டப் பிரிவு 80 சி.சி.எஃப் பற்றிய விவரங்கள்

வருமான வரிச் சட்டப் பிரிவு 80 சி.சி.எஃப் பற்றிய விவரங்கள்

வருமான வரிச்சட்டம் 2011 இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பிரிவானது முதலீட்டாளர்களுக்கு ரூ 20000 வரை வரி சேமிப்பை வழங்குகின்றது. எனினும் இந்த வரி சேமிப்பு உள்கட்டமைப்பு மற்றும் பிற வரி சேமிப்பு பத்திரங்களில் செய்யப்பட்ட முதலீடுகளுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது முதலிட்டாலர்கள் தங்கள் மேற்கொண்ட முதலீடுகளில் ரூ 20000 ஐ மட்டுமே மொத்த வரி வருவாயில் இருந்து கழிக்க முடியும். அதுவும் இது ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டிற்கு மட்டுமே பொருந்தும். எனவே இந்த குறிப்பிட்ட முதலீடுகள் ரூ 20000 வரை வரியைச் சேமிக்க உதவுகின்றது.

 வரிச் சட்டம் 80 சி

வரிச் சட்டம் 80 சி

நாம் அனைவரும் வருமான வரிச் சட்டம் 80 சி யின் கீழ் ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டிற்கு ரூ 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற இயலும். அதோடு கூடுதலாக இந்த 80 சிசிஎஃப் பிரிவின் கீழ் ரூ 20000 வரை வரி விலக்கு பெற இயலும். ஆக 80 சி மற்றும் 80 சிசிஎஃப் பிரிவுகளை பயன்படுத்தி ஒரு வருடத்திற்கு ரூ 1.7 லட்சம் வரை வரி விலக்கு பெற இயலும்.

அபாயம்

அபாயம்

இந்த வரி சேமிப்பு பத்திரங்கள் ஒரு அபாயம் இல்லாத முதலீடாக இருப்பதனால் முதலீட்டாளர்கள் எந்த விதமான பதற்றம் இன்றி இதில் முதலீடு செய்யலாம். மேலும் நம் நாட்டின் உள்கட்டுமானம் மிகவும் வேகமாக வளர்ந்து வருவதால், இத்தகைய முதலீட்டிலிருந்து கணிசமான வருவாய் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.

எனவே, நீங்கள் வாங்குவதற்கு உகந்த சில வரி சேமிப்பு பத்திரங்களை நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம். அதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

 

1. வீடமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கூட்டுத்தாபனத்தின் N4 தொடர் பத்திரங்கள்:

1. வீடமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கூட்டுத்தாபனத்தின் N4 தொடர் பத்திரங்கள்:

CARE இன் "CARE AA +" மற்றும் ஐஆர்ஆர்எல் இன் "IND AA +" தர மதிப்பீடு பெற்ற இந்த பத்திரங்கள் ஒரு சிறந்த முதலீடாக விளங்குகின்றன. முதிர்வுக்கு 10 ஆண்டுகள் தேவைப்படும் இந்தப் பத்திரங்கள் 7.34 சதவீத வருவாயை வழங்குகின்றன. அதிலும் சந்தையில் இந்தப் பத்திரங்கள் இறுதியாக 0.33 சதவீதம் அதிகமாக ரூ. 1050,10 ஆக விற்கப்படுகின்றது. பிப்ரவரி 16, 2013 ஆம் வெளியிடப்பட்டது முதல் இந்தப் பத்திரம் சராசரியாக ரூ. 1051.94 க்கு விற்கப்படுகின்றது.

2. IFCI NJ தொடர் பத்திரங்கள்:

2. IFCI NJ தொடர் பத்திரங்கள்:

இன்ஸ்டிடியூட் ஃபைனான்சியல் ஃபைனான்சியல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவினால் வெளியிடப்பட்ட இந்தப் பத்திரம் பிரிக்வொர்க் நிறுவனத்தினால் BWR AA- (அவுட்லுக்: நிலையானது) மதிப்பிடும், இ ஆர் சி ஏ நிறுவனத்தினால் A (நிலையானது) என்கிற தர மதிப்பிடையும் பெற்றுள்ளது. இந்த பாத்திரம் சந்தையில் இறுதியாக ரூ 1000 க்கு அதாவது 0.1 சதவீத வீழ்ச்சியுடன் விற்பனையானது. இந்த பத்திரங்களின் வட்டி விகிதம் மிகவும் கவர்ச்சிகரமானது. அதாவது இது சுமார் 9.35 சதவீத வருவாயை வழங்குகின்றது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னெவெனில் இந்த பத்திரங்களின் முதிர்வு காலம் 5 வருடங்கள் மட்டுமே.

 3. IRFC NA தொடர் பத்திரங்கள்:

3. IRFC NA தொடர் பத்திரங்கள்:

இந்திய இரயில்வே நிதிக் கூட்டுத்தாபனத்தின் மற்றொரு உள்கட்டமைப்பு நிறுவனப் பத்திரம் இது. இது சுமார் 8.65 சதவீத வருவாயை வழங்குகின்றது.இந்த பாத்திரங்களின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாக உள்ளது. இது ஒப்பீட்டளவில் சற்று அதிகம். இந்த பாத்திரங்களுக்கு CRISIL நிறுவனம் AAA தரச் சான்றும், ICRA நிறுவனம் AAA தரச் சான்றும், CARE நிறுவனம் AAA தரச் சான்றும் வழங்கி உள்ளன. இந்த பத்திரத்தின் சராசரி வர்த்தக விலை ரூ .200.51 ஆகும். இதற்கிடையில் இது நேற்றைய விலையான ரூ. 1203.90 ஐ விட 0.45 சதவீதம் அதிகமாக விற்பனையாகின்றது.

4. இந்தியா இன்ஃபோலினின் நிதி NA தொடர் பத்திரங்கள்:

4. இந்தியா இன்ஃபோலினின் நிதி NA தொடர் பத்திரங்கள்:

இந்தப் பத்திரங்கள் மிக அதிகமாக 12 சதவீத வருவாயை வழங்குகின்றன. ரூ. 1000 மதிப்புடைய இந்தப் பத்திரத்திற்கு 5 ஆண்டுகள் முதிர்வு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பத்திரங்களுக்கு ரூ 1200 கோடி வரை CARE நிறுவனம் AA (அவுட்லுக்: நிலையானது) தரச் சான்றும், Brickwork நிறுவனம் ரூ 1050 கோடி வரை BWR AA (அவுட்லுக்: நிலையானது) தரச் சான்றும் வழங்கி உள்ளன.இந்தப் பத்திரங்கள் கடைசியாக 0.27 சதவீதம் சரிந்து ரூ. 1017.25 க்கு விற்பனை ஆகின்றன. இதுவே இந்தப் பாத்திரங்களின் சராசரி வர்த்தக விலை வரம்பு ஆகும்.

5. இந்தியாவில் இன்ஃபோலைன் வீடமைப்பு நிதி N1 தொடர் பத்திரங்கள்:

5. இந்தியாவில் இன்ஃபோலைன் வீடமைப்பு நிதி N1 தொடர் பத்திரங்கள்:

CRISIL நிறுவனத்தினால் AA- தரச் சான்றும் CARE நிறுவனத்தினால் AA- தரச் சாந்தும் பெற்றுள்ள இந்தப் பத்திரங்கள் சுமார் 11.52 சதவீத வருவாயை வழங்குகின்றன. மேலும் இதற்கு சுமார் 5 வருடம் முதிர்வு காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாத்திரங்கள் சந்தையில் ரூ 1025 க்கு விற்கப்பட்டன. இந்தப் பத்திரங்களின் சராசரி விலை ரூ 1025.49 ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Best Listed Tax Saving Bonds To Buy

5 Best Listed Tax Saving Bonds To Buy
Story first published: Thursday, May 24, 2018, 18:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X