PMVVY என்பது, பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா என்பதன் சுருக்கமாகும். நிலையான வைப்புத் தொகை விகிதங்கள் கவர்ச்சிகரமானதாக இல்லாத நேரத்தில், வருமானம் பெற மூத்த குடிமக்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை PMVVY வழங்குகிறது என்று நிதி திட்டமிடுபவர்கள் கூறுகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டத்தில் மத்திய அமைச்சரவையில் தற்போது இருக்கும் முதலீட்டு அளவு 7.5லட்சம் ரூபாய், இரட்டிப்பாக்கப்பட்டு 15 லட்சமாக மாற்றி ஒப்ப்துதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக ரூபாய் 10,000 பெறலாம். இந்தத் திட்டத்தில் சந்தாதாராகச் சேருவதற்கான கடைசித் தேதியை நீட்டித்துள்ளது. ஏற்கனவே மே 4.2018 என்று இருந்த கடைசித் தேதியை தற்போது மார்ச் 31,2020 என்று மாற்றியமைத்துள்ளனர். 2018 ம் ஆண்டுப் பட்ஜெட்டில் நிதித்துறை அமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்கள் இந்த PMVVY முதலீட்டு அளவை 15 லட்சமாக அதிகரிக்க முன்மொழிந்தார்.
இந்தத் திட்டம் மூத்த குடிமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று நிதி ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
பிரதான் மந்திரி வயா வந்தன் யோஜனா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் தொ உங்களுக்காக :
பிரதான் மந்திரி வாய வந்தனா பென்ஷன் திட்டத்தில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?
PMVVY திட்டம் முதிர்ந்த வயதில் சமூகப் பாதுகாப்பு வழங்குவதற்கும், 60 வயதிற்கும் மேலான முதியவர்களுக்கும் நிச்சயமற்ற சந்தை நிலைமைகள் காரணமாக வருமான வருவாயில் எதிர்கால வீழ்ச்சிக்கு எதிராகப் பாதுகாக்க ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி) மூலம் செயல்படுத்தப்படுகிறது.
எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்
ஒரு வருடத்திற்கு 8 சதவீதம் என்று தொடர்ந்து 10 வருடத்திற்கு உத்தரவாத ஓய்வூதியத்தை இந்தத் திட்டம் வழங்குகிறது. மாதந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் இந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
எல்ஐசி
இந்தத் திட்டத்தின்போது எல்.ஐ.சி. மூலம் உருவாக்கப்படும் வருவாய் மற்றும் வருடாந்தம் 8 சதவிகிதம் என்ற வருவாய்க்கு இடையேயான வித்தியாசம், வருடாந்திர அடிப்படையில் மானியமாக அரசாங்கத்தால் தோற்றுவிக்கப்படுகிறது.
எவ்வளவு நபர்கள் இதில் முதலீடு செய்துள்ளனர்?
மார்ச் 2018 ஆம் ஆண்டளவில் 2.23 லட்சம் மூத்த குடிமக்கள் பிரதான மந்திரி வயா வந்தன் யோஜனா (PMVVY) கீழ் வழக்கமான ஓய்வூதியம் பெறுகின்றனர்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்தியாவின் லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் (எல்.ஐ.சி) மூலம் ஆன்லைனில் மற்றும் ஆப்லைனில் இந்தக் காப்பீட்டை வாங்கலாம்.
எவ்வளவு பணம் கிடைக்கும்?
பத்து ஆண்டுகளுக்குள் பாலிசி காலவரையின் முடிவில், ஓய்வூதியம் பெறுபவர் இறுதி ஓய்வூதிய தவணையுடன் சேர்த்து கொள்முதல் விலை (ஓய்வூதியத்தைச் சம்பாதிக்க முதலீடு செய்யப்படும் தொகை) திரும்பப் பெறுகிறார்.
இறந்தால் என்ன ஆகும்?
10 வருட காலக் கொள்கையில் ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால், அனுபவ பாத்தியம் உள்ளவருக்கு வாங்குதல் விலை வழங்கப்படும்.
கடன் பெற முடியுமா?
தற்போது, கொள்முதல் விலையில் 75 சதவீதம் (ஓய்வூதிய சம்பாதிக்க முதலீடு செய்யப்படும் தொகை) மூன்று கொள்கை ஆண்டுகளுக்குப் பிறகு திரவத் தேவைகளைப் பூர்த்திச் செய்யக் கடன் தொகையாக அனுமதிக்கப்படுகிறது.
முன்கூட்டியே வேளியேற முடியுமா?
PMVVY திட்டம் சுய அல்லது மனைவியின் எந்தவொரு முக்கியமான / தீவிர நோய்க்கு சிகிச்சையளிக்க முன்கூட்டியே திட்டத்தில் இருந்து வெளியேறவும் வாய்ப்பை வழங்குகிறது. அத்தகைய முன்கூட்டிய வெளியேற்றத்தில், கொள்முதல் விலையில் 98 சதவிகிதம் திருப்பிச் செலுத்தப்படும்.