வட்டி விகித உயர்வு என்பது எப்போதும் டெபட் மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களர்களுக்குக் கெட்ட செய்தி ஆகும். அதிலும் நீண்ட கால டெபட் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக நட்டத்தினை அளிக்கும்.
அதே நேரம் ஆர்பிஐ வட்டி விகித உயர்வை அறிவித்து இருப்பது ஏற்கனவே பல முதலீட்டாளர்கள் கணித்து இருக்கும் நிலையில் அவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. ஆனால் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் துவக்க நிலையில் முதலீடு செய்துள்ளவர்கள் இது பற்றி அறிந்து இருக்க மாட்டார்கள்.
வட்டி விகித உயர்வு
இந்திய ரிசர்வ் பங்கு புதன் கிழமை நாணய கொள்கை கூட்ட முடிவில் ரெப்போ விகிதத்தினை 0.25% உயர்த்தி 6.25% ஆக அறிவித்துள்ளது. அதே நேரம் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தினையும் 0.25% உயர்த்தி 6% ஆக அறிவித்துள்ளது.
பணவீக்கம்
நுகர்வோர் விலை குறியீட்டுப் பணவீக்கம் குறைந்து காணப்படும் போது அதனை நடுநிலை படுத்த ஆர்பிஐ எடுக்கும் முடிவே இந்த வட்டி விகித உயர்வு ஆகும்.
மியூச்சுவல் ஃபண்டு ஆலோசகர்கள்
வட்டி விகிதம் குறையும் வரை பல மியூச்சுவல் ஃபண்டு ஆலோசகர்கள் முதலீட்டாளர்களைக் குறைந்த கால டெபட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களைத் தான் முதலீடு செய்யப் பரிந்துரைப்பார்கள். அதே நேரம் சிலர் நீண்ட காலத் தேவையாக முதலீட்டாளர்களுக்கு இருக்கும்போது நீண்ட கால முதலீடுகளைப் பரிந்துரைப்பார்கள்.
தாக்கம்
பொருளாதாரத்தில் எப்போதெல்லாம் வட்டி விகிதம் உயருமோ அப்போது எல்லாம் நீண்ட கால டெபட் மியூச்சுவல் திட்ட முதலீடுகளில் தக்கம் ஏற்படுவது வாடிக்கையே ஆகும்.
மாற்று வழி என்ன?
வட்டி விகிதம் கண்டிப்பாக டெபட் முயூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதால் கிரெடிட் ரிஸ்க் ஃபண்டு அல்லது கார்ப்ரேட் பாண்டு ஃபண்டுகளில் முதலீடுகளைச் செய்யுமாறு வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய என்ன வழி?
உங்களுக்கு அதிக ரிஸ்க் பற்றிக் கவலை இல்லை என்றால் தான் கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுகளில் முதலீடு வேண்டும். இல்லை என்றால் கார்ப்ரேட் பத்திர ஃபண்டுகளைத் தேர்வு செய்வது நல்லது.