ஒரு நாடு வளர்ச்சி அடைய அடைய நாட்டின் பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும். இதைத் தான் தற்போது மத்திய அரசு செய்து வருகிறது.
மோடி தலைமையிலான மத்திய அரசு சில ஆண்டுகளாகவே நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் பல பணிகளைச் செய்து வருகிறார். இதில் முக்கியமான ஒன்று Defence Innovation Organisation நடத்தும் Defence India Startup Challenge.
இந்த மாபெரும் போட்டியில் பெங்களூரிலிருந்து அதிகளவிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இதில் தேர்வாகும் நிறுவனங்கள் அனைத்தும் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இப்படி இதுவரை தேர்வான நிறுவனங்களில் 30 சதவீதம் பெங்களூரைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் தான். பெங்களூர் நிறுவனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் உயர்ந்து வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை செயலாளர் சஞ்சய் ஜாஜூ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஸ்டார்ட்அப் ஹப் ஆக விளங்கும் பெங்களூர் நகருக்கு இது மகுடம் என்றால் மிகையில்லை.