மத்திய கிழக்கு நாடுகளின் கோடிஸ்வரர் மற்றும் துபாய் இளவரசுருமான அல்வாலேத் பின் தாலால் உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள முக்கிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இவரை மத்திய கிழக்கு நாடுகளில் வாரன் பபெட் என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.
பில்கேட்ஸ் முதல் ரூபர்ட் முர்டோக் மற்றும் மைக்கேல் வரை பலருடன் வணிக ரீதியாகத் தொடர்பில் இவர் உள்ளார். ஆனால் தற்போது இளவரசர் அல்வாலேத் பின் தாலால், துபாயினைச் சேர்ந்த இளவரசர்கள், மற்றும் அமைச்சர்கள் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகப் பணக்காரர் பட்டியல்
ப்ளூம்பெர்க் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 50 வது இடத்தினை 19 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அல்வாலேத் பின் தாலால் இடம்பெற்றுள்ளார். ரியாத்-சார்ந்த முதலீட்டு நிறுவனமான கிங்டம் ஹோல்டிங்-ன் நிறுவனர் ல்வாலேத் பின் தாலால் ஆவார்.
டிரம்ப்பைக் காப்பாற்றியிருக்கிறார் தெரியுமா?
1991-1995-ம் ஆண்டுகளில் தற்போது அமெரிக்க அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப் அவர்களின் ரியல் எஸ்டேட் வணிகம் மோசமான நிலையில் இருந்த போது டிரம்ப்பின் விலை உயர்ந்த ஆடம்பர கப்பல் ஒன்றை வாங்கியது மட்டும் இல்லாமல் டிரம்ப்பின் பிளாசா ஹோட்டலில் முதலீடு செய்து உதவி புரிந்துள்ளார்.
முர்டோக் ஊழல்
2011-ம் ஆண்டு முர்டோக்கின் பிரிட்டிஷ் பிரிவு செய்தி நிறுவனத்தின் தலைவராக இருந்த போது தொலைப்பேசி ஒட்டுக்கேட்ட புகாரின் பேரில் பதவி விலகினார்.
21-ம் செஞ்சூரி ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தில் 2013-ம் ஆண்டு வரை முதலீடு செய்து இருந்தார்.
அனைத்தும் சமாதானத்திற்கு
2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டொனால்டு டிரப்பை பார்த்து அமெரிக்காவின் அவமான சின்னம் என்று அழைத்தார். உலக நாடுகளின் சகிப்புதன்மையை ஏற்றுக்கொள்ளத் தனது மொத்த சொத்தையும் நன்கொடையாக அளிக்கத் தயார் என்று அறிவித்தார்.