'ஆளில்லா வங்கி' புதிய சேவையை அளிக்கத் துவங்கியது பாங்க் ஆஃப் அமெரிக்கா..!

ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்க 'ஆளில்லா வங்கி' சேவை.. பாங்க் ஆஃப் அமெரிக்கா புதிய திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் அமெரிக்கா கடந்த ஒரு மாதத்தில் 3 ஆளில்லா வங்கி கிளைகளைத் துவங்கியுள்ளது.

 

இக்கிளைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பிற வங்கிகளில் இருக்கும் பாங்க் ஆஃப் அமெரிக்கா ஊழியர்களிடம் பேசவும், வீடியோ கான்பெரன்ஸ் மூலம் எளிதாகத் தொடர்புகொள்ள முடியும் என இவ்வங்கியின் செய்தி தொடர்பாளர் அனி பேஸ் தெரிவித்துள்ளார்.

பாங்க் ஆஃப் அமெரிக்கா

பாங்க் ஆஃப் அமெரிக்கா

அமெரிக்காவில் பல வங்கிகள் செய்ததைப் போலவே பாங்க் ஆஃப் அமெரிக்காவில் குறைந்த வருமானம் அளிக்கும் வங்கிகளை மூடியது. இதேபோல் பல கிளைகளில் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆளில்லா வங்கி

ஆளில்லா வங்கி

இதன் மூலம் இவ்வங்கியின் செலவுகளை அதிகளவில் குறைந்தாலும், வர்த்தகத்தைத் தொடர்ந்து அதிகரிக்கும் வகையில் தொழில்நுட்ப உதவிகளைக் கொண்டு 'ஆளில்லா வங்கி' என்ற புதிய சேவையை அளிக்கத் துவங்கி உள்ளது பாங்க் ஆஃப் அமெரிக்கா.

பிற முக்கியச் சேவை
 

பிற முக்கியச் சேவை

அமெரிக்காவில் பல வங்கிகள் இதேபோன்ற சேவை அளிக்கிறது இதில் என்ன பெரிய விஷயம் என்று நீங்கள் கேட்கலாம், பிற வங்கிகள் வெறும் பணப் பரிமாற்ற பணிகளை மட்டுமே செய்து வரும் நிலையில், பாங்க் ஆஃப் அமெரிக்கா வீட்டுக் கடன், அடமான கடன், கிரேடிட் கார்டு மற்றும் ஆட்டோ லோன் எனப் பல பரிவுகளில் தனிப்பட்ட முறையில் கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது.

சிறிய வங்கி

சிறிய வங்கி

அமெரிக்காவில் மீன்னாபோலீஸ் மற்றும் டென்வர் பகுதிகளில் இருக்கும் புதிய ஆளில்லா வங்கிக் கிளைகள் முழுமையான சேவை அளிக்கக் கூடியவை. அது சாதாரண வங்கி கிளை அளவில் நான்கில் ஒரு பங்கே இதன் அளவீடு.

60 கிளை துவக்கம்

60 கிளை துவக்கம்

1 மாத காலத்தில் 3 வங்கி கிளைகளைத் துவங்கி பாங்க் ஆஃப் அமெரிக்கா அடுத்த ஒரு வருடத்திற்கு இதேப்போன்று சுமார் 50-60 ஆளில்லா வங்கி கிளைகளைத் துவங்கத் திட்டமிட்டுள்ளதாக இவ்வங்கியின் துணை தலைவர் டீயன் தெரிவித்துள்ளார்.

ஆட்டோமேஷன்

ஆட்டோமேஷன்

இத்தகைய ஆளில்லா வங்கிகளையே ஆட்டோமேஷன் எனக் கூறப்படுகிறது. வங்கி கிளைகளை முழுமையாக மூடினாலும் வங்கிகள் இயல்பாக இயங்கும் அளவிற்கு இந்த ஆளில்லா வங்கிகள் இயங்கும் திறன் வாய்ந்துள்ளது.

இதனால் வங்கித்துறையில் இருக்கும் பல ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகும்.

 

இந்தியா

இந்தியா

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி ஆகியவை தற்போது ஆளில்லா வங்கி சேவை அளிக்கும் அடித்தளத்தை அமைத்து வருகிறது. இதன் முதல் பகுதிதான் ரோபோ-க்களின் அறிமுகம்.

ஐடி

ஐடி

ஆட்டோமேஷன் என்பது ஐடித்துறையில் மட்டும் வருபவை அல்ல, ஐடி சேவைகளை நம்பி இயங்கும் அனைத்துத் துறைகளிலும் ஆட்டோமேஷன். இதற்கு முதல் உதாரணம் ஆட்டோமொபைல் துறை.

30 வருடங்களுக்கு முன் வாகன தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ள நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை பல லட்சங்களாக இருக்கும் நிலையில் தற்போது சில ஆயிரங்கள் ஊழியர்களைக் கொண்டு சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. இதே நிலை தான் பிற துறைகளிலும் வரும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank of America opens branches without employees

Bank of America opens branches without employees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X